Search This Blog

Friday 27 December 2013

அறுவடை வயலில் சிந்திச்சிதறிய
நெல் மணிகளை பொறுக்கி
வயிறு நிரப்பிடும் குருவிகள் போன்று 
நீ விதைத்து சென்ற காதல் 
பயிரின் மூப்பால் தாமே உதிர்ந்த 
நினைவுகளினைத்தேடி தேடிப்பொறுக்கி
மனம் நிரப்பிக் கொள்ளுகின்றேன்...

சுவரொட்டிகளின் ஆதிக்கம் பெற்ற வீதியோர மதிற்
சுவராய் உன் நினைவுகளால் கிறுக்கப்பட்ட இதயம்
சுத்தமாக்கிட எத்தனிக்கவில்லை மனம்...!
பத்திரமாய் கிறுக்கல்களை பொத்தி வைத்திருக்கின்றது..!






No comments:

Post a Comment