Search This Blog

Tuesday 15 June 2010

சிரித்து பரந்து நிமிர்ந்த எம் வானம்,, சிறுகித்தலை குனிகின்றது இன்று..

தமிழீழத்தேசமதின் உயிர் நாடி - எங்கள்

தங்க நகரம் கிளிநொச்சி

தரங்கெட்ட சிங்களவனின் கையில்...



முற்று முழுதாய் புத்தனின் தேசமாய்

மூழ்கிக்கொண்டிருக்கின்றது எம் கலாச்சார நகரம்



சிங்களவனின் சீர்கேட்ட செயலால்

சினம் கொண்டு எழ வேண்டாமோ..?



சிரிப்பைத்தொலைத்து விட்ட இனம்

சிந்தனையையும் தொலைத்து விட்டதன்றோ..?



சிவப்பு மஞ்சள் கொடியின் பறப்பில்

சிரித்து பரந்து நிமிர்ந்த எம் வானம்

சிறுகித்தலை குனிகின்றது இன்று..

சிங்களக் கலாச்சார கொடிகளின் ஆக்கிரமிப்பால்



வெசாக் கூடுகள் அலங்கரிக்கின்றன

வெந்து போன எம் தேசமதை...



கன்னிகளின் கற்பு

காடையரால் களவாடப்படுவதும்,

கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் மனிதப் புதைகுழிகளும்

கபாலமும் எலும்புக்கூடுகளுமாய்..

மயானங்கள் கூட தோற்று விடும் தேசமாக - மெல்ல

மரணித்து போகின்றது எம் தேசம்...



கண்முன்னே மண் காணாமல் போவதை

கண்டும் கேட்டும் இருந்து - இரத்தக்

கண்ணீர் வடிப்பதை தவிர

வேறென்ன முடியும் எம்மால்..?



சிங்கம் சிம்மாசனத்திலே கொடுங்கோலோச்ச

சிறு நரிக் கூட்டங்கள் மானங்கெட்டு சாமரை வீச..

இதயம் ஏங்குகின்றது...!!