இருளோடு ஒளிந்து
இரும்பு நெஞ்சமது துவண்டு
இடுக்கண் இமயமாய் பெருகி வர..
இதமாய் ஒரு நன்மொழி பேசி,,
இதயத்தை வருடி - மெல்ல
இன்பம் நல்கிய இனியவனே..!!!
நினைப்பை
நிஜமாக்கி - பால்
நிலவாய் என் வாழ்வில் உதித்த
நிலவனே...!!!
பத்தாண்டு உறவாய்
பக்குவமாய் என்னை - உன்
இதயமதில் இருத்திக்கொண்ட
இதயவனே..!!!
உண்மைகள் பல
உணர்த்தப்பட்டும் எனை
உயிராய் தாங்கும் - என்
உயிர் கொண்ட தெய்வமே..!!!
காதல் கணவனே..!!!
காலங்கள் கடந்தாலும்,,
என் நெஞ்சமதில் உன்னை இருத்தி,,
என்றென்றும் பூஜிப்பேன்
என் இறையாக......
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....!!!!
அரசி