Search This Blog

Sunday 15 September 2013

தமிழ் நாட்டில் உள்ளோர் நரியின் ஊளையிடலை தொடர்ந்தும் நாட்டிற்குள் அனுமதிக்க போகின்றார்களா??

உலக வல்லரசுகளே மூக்கில் விரல் வைத்து அசரக் கூடிய மிகத்திறமையான ஒரு நிர்வாகக் கட்டுமானத்தை கட்டியாண்ட, மக்களைப் பாதுகாத்து  போராளிகளை  வழி  நடாத்தி குறுகிய காலத்தில் பிரமாண்டமான அரசமைப்பை நிறுவி நீதியை நிலை நாட்டி ஒரு கட்டுக்கோப்பான   நிர்வாகத்தில் கொடி கட்டிப்பறந்த தமிழீழ விடுதலைப்புலிகளைப் பற்றி ஒரு குறை குற்றம் கூறக்   கூட வாய் திறக்கவே சிந்திக்க வேண்டும். ஆனால் எவ்வளவு ஒரு துணிச்சல்??? ஒரு சிங்களவன் தன்னும் இந்த நினைப்பை உண்மையாக்க துணிந்ததில்லை. நாம் எல்லோரும் காறி உமிழ்கின்ற எச்சில்களில்  இந்த அற்ப புழு  மூச்சுத்திணறி தத்தளிக்க வேண்டும்.

வல்லரசாகிடப்போகும் இந்தியா என்னும் அண்டப் புளுகை அள்ளி விட்டுக்கொண்டு அரைகுறை அரசாங்கம் நடாத்தும் அம்மணிமாரின் அரச வரையறைக்குட்பட்ட இந்திய வல்லாதிக்க தேசத்தில் நிர்வாக சேவைகள் அதிகாரியாக பணி புரிந்தவராம் இந்த சிவகாமி. இவர்களைப்போன்றவர்களின் நிர்வாகத்தில் தான் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கயவர்களால் குதறப்படுவதும் பதின்ம வயது பாலகிகளின்  கருக்கள்  நரிகளால் குதறப்படுவதும் வழமையான நிகழ்வுகள் ஆகி தொடர்கின்ற தொடர்கதைகளாக மாற்றம் பெற்று விட்டனவே. அதாவது சிவகாமிக்கு நன்கு பழக்கமான நிகழ்வுகள் அவை. அவரின் நிர்வாக சேவையில் அவர் கற்றுக் கிழித்து அதிகாரம் செலுத்தி வந்த நாட்டில் நடக்கும் ஒரு சிறிய அட்டுழியத்தைத் தட்டி கேட்க துப்பிலாத சிவகாமி கடல் தாண்டி உள்ள ஈழத்துக்கு போய் விட்டாராம் பெண்களின் உரிமை பற்றி பேச. இல்லை இல்லை  விடுதலைப்புலிகளின் பெண் புலிகளை வசை பாட.

நான்கு வருடங்களுக்கு முன்பு எம் வீரப்பெண் புலிகள் தெருநாய்களாலும் நரிகளாலும் நயவஞ்சகமாக குதறப்பட்டு, இணையங்களிலும் சனல் 4 இலும் கிழிபட்டு தொங்கும் போது அம்மணி வேற்றுக்கிரகம் சென்றிருந்தாரா.? அல்லது அம்மணியின் இந்த வீர வசனங்களை அவர் புலிகள் ஆட்சியில் இருக்கும் போது கேட்டிருக்கலாமே...??? ஒருவேளை இப்பதான் சகாக்களை வைத்து திட்டம் தீட்டி இப்படி ஒரு யோசனை மூலம் பிரபலம் பெற முடிவு பண்ணியிருக்கின்றார்களோ?

ஒரு பாலியல் பலாத்கார கொடிய நிகழ்வு இடம்பெற்று, இன்று அரையாண்டு முடிகின்ற நிலையில் தான் அதுவும் அரையும் குறையுமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு (அதுவும் மாணவர்களின் போராட்டம் மக்களின் எதிர்ப்பு என்பனவற்றிற்கு அஞ்சி) இருக்கின்றது. இந்த அம்மணியின் சேவைகள் பெற்றுக்கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில் மனிதாபிமானம் மற்றும் பெண்மைக்கு கிடைக்கின்ற மரியாதையின் இலட்சணம் உலகறிந்த உண்மையாக இருக்கும் போது இந்த அம்மணி தன் மூளையினை கழற்றி அடகுக்கடையில் வைத்து விட்டு விவாதம் பேச வந்ததா?? அல்லது மூளையே இல்லையா ?



இனவாதம் என்ற ஒன்று தலை தூக்கியதால் தால் இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டது . ஆனால் இந்தியாவில் அதுவும் தலை நகரில் பெரும்பான்மை பெண்ணே குரல் வளை நசிக்கப்பட்டு கதறக் கதறக் கருவறுத்துக்கொல்லப்பட்டாள். தமிழ் பெண்கள் தமிழ் கயவர்களால் திராவகம் தெளிக்கப்பட்டும் பலாத்காரம் பண்ணப்பட்டும் உருக்குலைக்கப்பட்டதிற்கும் இந்த மாதிரியான பொறுப்பற்ற நிர்வாக சேவைகள் அதிகாரிகளும் அவர்களின் அதிகார துஷ்பிரயோகங்களும் தான் முதற்காரணம் என்பது நாம் கூறித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை. உலக நாடுகளினால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்று உறுதி  வழங்கபட்ட இந்திய நாட்டில் இருந்து கொண்டு உலகில் உள்ள எந்த பெண்ணை பற்றியும் பேசத் தகுதி இல்லாத போது பெண்களுக்கு பெருமையையும் மரியாதையையும் அள்ளிக்கொடுத்து பெண்ணடிமைத்தனத்தை தகர்த்தெறிந்த புலிகளை விமர்சிக்க என்ன அருகதையும் தைரியமும் இந்த அற்பம் தன்னகத்தே கொண்டுள்ளது.???




எது எப்பிடியோ உலகில் இன்று மிக மிக முக்கியமானவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் என்பதை அறிந்து வைத்திருக்கும் வரை மகிழ்ச்சியே...! அதாவது கடவுளைப்பற்றி அவதூறு பேசினாலும் இவ்வுலகில் யாரும் இந்தளவு கொதித்து எழ மாட்டார்கள். இந்த உலகில் தமிழினத்தால் மிகவும் நேசிக்கப்படும் நிலையிலும் அவர்களின் நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் உரிய புலிகளைப்பற்றி பேசி பிரபலம் ஆக நினைத்து வந்த இந்த பெண்ணுக்கு யாரும் அறிவுரை சொல்லவில்லை போலும். அல்லது புலிகளைப்பற்றி அந்த தெரு நாய்க்கு ஏதும் தெரியாது போலும். இல்லாவிட்டால் மற்றவர்களைப்போல் அதாவது சிங்களவனைப்போல் பயங்கரவாதி என்றோ அல்லது போர்க்குற்றம் என்றோ பிதற்றி இருக்கும். ஒட்டு மொத்தத்தில் ஈழத்தில் என்ன நடைபெற்றது என்று அறியாத இந்த அற்பம் எப்படி இந்திய நிர்வாக சேவைகள் அதிகாரியாகப்பணி புரிந்தது?
பெண்புலிகள் எதற்கு பயன்படுத்தப்பட்டார்கள் என்று விளக்கம் கொடுத்த இந்தப்பெண்ணும் அவ்வாறு தான் பயன்படுத்தப்பட்டு அதிகாரியானவளா??

பொதுவாக எம் புனிதர்களைப் பற்றியோ அல்லது புனிதப்போர் பற்றியோ அவதூறு பேசுபவர்களைப் பற்றி நான் கருத்தில் கொள்வதில்லை. மலையினைப்பார்த்து நாய் குலைப்பதால் மலை காயப்பட்டு போவதில்லை என்று நன்கறிந்த எனக்கு இன்றும் என் நண்பர்கள் பலர் இதைப்பற்றி எழுத வேண்டாம் அவளை ஒரு பொருட்டாக எடுக்க வேண்டாம் என்று தான் கூறி இருந்தார்கள். ஆனால் இது தெரு நாய் அல்லவே... இதை என்னவென்றே அழைப்பது என்று எனக்குப்புரியவில்லை..ஆம் அசிங்கத்தை அள்ளி புனிதம் மீது தெளிக்கின்ற இந்த அற்பத்தை நாலு வார்த்தையால் சாட்டை அடி அடிக்காமல் விட்டால் நான் தமிழச்சியாய் பிறந்ததிற்கு அர்த்தமே  இல்லை.

சாதி ஒழிப்பை பற்றி இந்தியாவில் போராட்டம் மற்றும்  இயக்கம் நடாத்தி வரும் இந்த அம்மணியால் ஒரு சிறிய ஊரிலாவது சாதி வெறியை ஒழிக்க முடிந்ததா?? உண்மையில் சாதி ஒழிப்பு இயக்கமா இவள் நடாத்தி வருகின்றாள்?? அப்படியாயின் விடுதலைப்புலிகள் பற்றி இவ்வாறு பேசியிருக்க மாட்டாள். ஆம், சாதி என்பது புலிகளின் நிர்வாக ஆட்சியில் காணாமல் போயிருந்த ஒன்று. ஒட்டு மொத்தமாக சாதி என்பது ஈழத்தில் வேரறுக்கப்பட்டு இருந்தது புலிகளால். உண்மையில் சாதியத்திற்கு எதிராக குரல் கொடுப்பவளாயிருந்தால் அவள் புலிகளுக்கு தான் முதல் புகழ் மாலை சூடி   இருந்திருப்பாள். சாதி ஒழிப்பு என்கின்ற போர்வையில் இருந்து கொண்டு சாதியை தூபம் போட்டு புகைத்து குளிர் காயும் இந்த அம்மணி தான் உண்மையில் சாதி ஒழிப்பு என்ற நற்பயிருக்கு எதிரான களை. அதனால் தான் போராட்டங்கள் என்று ஊரையும் நாட்டினையும் ஏமாற்றி வயிறு வளர்த்து தொலைக்காட்சி , விவாதம் என்று விளம்பரம் தேடுகின்றாளே தவிர சாதி தன்பாட்டில் கொழுந்து விட்டு எரிவதைக்கண்டும் காணாமலும் இருக்கின்றாள்.


ஒரே ஒரு அறிவிப்பில் சாதி என்பது ஈழத்தில் காணாமல் போனதும் அங்கு அர்த்த இராத்திரியிலும் இளம் பெண்கள் நடமாட முடிந்ததும் புலிகளால் என்பதை கேள்விப்பட்டே இருந்திருக்க மாட்டாள் இந்த அற்பம். இவளின் பேச்சுகளை நினைத்துப்பார்க்கவே அருவெருப்பாகவே இருக்கின்றது. ஈழம் பற்றி பேசவும், புலிகளை பற்றி அவதூறு பேசவும் இந்த அற்பத்திற்கு என்ன அருகதை இருக்கின்றது? யார் அந்த உரிமையை கொடுத்தது?





சொந்த உறவுகளைத்துறந்து மண்ணின் மேல் காதலுற்று ஒரு இலட்சியப்பாதையில் தலைவன் பின்னால் அணிதிரண்டு கல்லிலும் முள்ளிலும் குளிரிலும் நெருப்பிலும் கடலிலும் பயணித்தவர்கள் எம் வீர மறத்தமிழச்சிகள்.  




எம் வெஞ்சினப் புலி வேங்கைகள் இந்த அம்மணி உளறிய அப்பட்டமான பச்சை வார்த்தைகளுக்கு   அப்பாற்பட்டவர்கள் என்பதை உண்மைத்தமிழ் நெஞ்சங்களால் தான் உணர்ந்து கொள்ள முடியும். அந்த இலட்சியப்புருசர்களின் தியாகங்களை உண்மை இதயங்களால் தான்  அறிந்து கொள்ள முடியும்.



தமிழ் நாட்டில் தொட்டதிற்கும் போராட்டம் , தீக்குளிப்பு என்பனவற்றை நிகழ்த்தும்  மக்கள் இந்த நரியின் ஊளையிடலை தொடர்ந்தும் நாட்டிற்குள் அனுமதிக்க போகின்றார்களா?? அல்லது குரல்வளையை நெரித்து எதிர்காலத்தில் இனிமேல் ஊளையிடவே நினைக்காதவாறு செய்வார்களா??
இப்படிப்பல நரிகள் , ஓநாய்களை நாட்டில் ஊளையிட அனுமதித்து விட்டு நாட்டிற்கு வெளியே உள்ள ராஜபக்சவையும் ஐ. நாவையும் தட்டி கேட்கின்றோம் என்றோ அல்லது அழுத்தம் கொடுக்கின்றோம் என்றோ போராட்டம் செய்வதால் என்ன பிரயோசனம்? உங்கள் நாட்டில் உள்ள களைகளுக்கு கிருமி நாசினிகளை தெளிக்க முதலில் முயற்சி செய்யுங்கள்...! அதன் பின் நாற்றுக்களுக்கு எப்படி உரமிடலாம் என்று சிந்தியுங்கள்...!


அரசி நிலவன்    

1 comment:

  1. யதார்த்த வரிகளைத் தாங்கிய கட்டுரை மிக அருமை. உறைக்கும் உண்மைகள் அவர்கள் இதயத்தை எரிக்கட்டும்.

    ReplyDelete