Search This Blog

Saturday 21 September 2013

வழுவாய் முடியாமல் தவிக்கின்றேன் வன்மை காதலால்...!!!


வலுவான இதயத்தை 
வலிய வம்புக்கிழுத்து,,
வலிந்த வன்னி வயன 
வல் அம்புகளால் துளைத்து,,
வலிக்க வைப்பதனால்.... 
வல்லவன் நீ எதில் 
வலங்கொள்கின்றாயோ...??

வழியற்று யான் உன்னை 
வழிக்கொள்ளவில்லை..!
வழுக்கினேன் உன் காதலில்..!
வழிபார்த்தேன் பற்பல உன்னிடம்...!
வழிபட்டேன் வழிபடுகடவுளாக...!

வழுக்களை வாரி இறைத்து,,
வசைமாரி பொழிந்து,,
வன்சொல் உதிர்த்து,,
வன்மம் தீர்க்கின்றாய்...!


வஞ்சித்து வசீகரித்தாய்..!
வஞ்சனாயினும்,,,,
வழுவாய் முடியாமல் தவிக்கின்றேன்
வன்மை காதலால்...!!!



அரசி நிலவன் 

2 comments:

  1. வஞ்சித்து வசீகரித்தாய்..!
    வஞ்சனாயினும்,,,,
    வழுவாய் முடியாமல் தவிக்கின்றேன்
    வன்மை காதலால்...!!!//

    மனம் கவர்ந்த அருமையான வரிகள்
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்


    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள்....உங்கள் கருத்துக்கள் என்னை வளம் படுத்துபவை....வரவேற்கின்றேன் மேலும்...

      Delete