Search This Blog

Friday 24 January 2014

தமிழ் போல் நிலைத்து நீ வாழ்க...!


இருள் நீக்கி இனிமை கொடுத்திட
அருள் பெற்று இதழ் விரித்து மலர்ந்தவனே..!
இன்பம் பொங்க வைத்த இசையரசனே....!!!

பரவசம் கொடுத்தாய் பண்பாக்கினாய்
பனி மலரே உந்தன் மலர்ச்சியில்
பறந்தோடும் துன்பங்கள் யாவும்...!

கண்ணீர் கொண்டால் கரையும் சின்னவனே...!
கண்டபடி திட்டும் குழப்படியானவனே...!
கன்னித்தாயவளின் குலக்கொழுந்தே...!

எனை அடக்கி ஆளும் மதுவனே...!
எங்கும் என்றும் எதிலும் என் விம்பமாய்
கனிவாய் சிரிப்பாய் துடிப்பாய் துள்ளுவாய்
எனதாய் உனதாய் உதிரமாய் போனவனே...!


மனதால் குறும்பால் தெய்வமாய் தெரிவாய்
கொஞ்சு தமிழும்  இனிமை பெருகின்றதடா
பிஞ்சு உந்தன் நாவில் புரள்வதால்...
மஞ்சுக்குட்டியே - உன்னை
வித்திட்டவனை மலர்ப்பாதம் தொட்டு - தள்ளி
விலக்கி வைத்தாய்
அகவை மூன்றிலும் - அருகின்றி
அணைத்து முத்தமிட்டு வாழ்த்திட வழியின்றி இதயம்
இணைத்து காற்றில் தூது விடும் எந்தையின் குரலும்
உனக்கென்றால் உயிர் பெறுமே....!

உன் அகவையில்
உள்ளங்கள் மலரட்டும்...!
உயிர் பெற்று ஊசல் ஆடட்டும்..!

உந்தன் சிரிப்பு நான்கு சுவர் தாண்டி
உலக வலம் வரட்டும்...!

எனக்குள் உயிரானவனே - இன்று
உயிர் கொடுக்கின்றாய் எனக்கு...
உன் அகவையால்...
உண்மைகள் துலங்கட்டும்
உறவுகள் கை சேரட்டும்...!

தமிழ் மேல் காதல் கொண்டு
தமிழ் வளர்த்து  தமிழுக்காய் நீ வாழ்க...!!!
தமிழ் போல் நிலைத்து நீ வாழ்க...!

பல்லாண்டு காலம் பண்பிலே சிறந்து
பல்கலையும் கற்று பணிவோடு வாழ்க
இதயம் கனிந்து உச்சி முகர்ந்து வாழ்த்துகின்றேன்..!
வாழ்க வாழ்க வாழ்க...!  

1 comment:

  1. /// தமிழ் மேல் காதல் கொண்டு
    தமிழ் வளர்த்து தமிழுக்காய் நீ வாழ்க...!!!
    தமிழ் போல் நிலைத்து நீ வாழ்க...! ///

    சிறப்பான வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete