Search This Blog

Tuesday 14 January 2014

பொங்கட்டும் இன்பம்..!!!





அமைதி என்னும் அரிசியோடு 
இனிமை என்னும் வெல்லம் சேர்த்து 
துன்பம் என்னும் அக்கினியில் 
இன்பம் என்னும் பால் பொங்கி 
தித்திப்பாய் தேனாய் வாழ்வு இனிக்கட்டும்...!

சங்கத் தமிழ் புது வருடம் பிறக்கட்டும் 

எங்கள் நம்பிக்கை விதைகள் முளைக்கட்டும்...!

விடியாத இரவுகள் விடியட்டும்..! 

கண்ணீர் விழிகள் துலங்கட்டும்..!!

பொய்கள் மறையட்டும்..! 

உண்மைகள் பறையட்டும்..! 

இன்பம் எங்கும் பொங்கட்டும்..! 

துன்பம் தொலைவில் தூங்கட்டும்..! 

தமிழ் உயர ஓங்கட்டும்..! 

தரணி எங்கும் பரவட்டும்..! 

தமிழர்கள் தமிழ் பேசட்டும்..!

தன்னிகரற்று தமிழ் வளரட்டும்..!

சுதந்திர தாகம் தணியட்டும்...!

தந்திர அரசியல் மாளட்டும்...!

காணாமல் போனோர் கை சேரட்டும்..! 

மனிதப்புதைகுழிகள் முளைக்காமல் போகட்டும்..! 

வறுமை காணாமல் போகட்டும்..! 

வசந்தம் வாழ்வில் வீசட்டும்...!

குற்றங்கள்  குறையட்டும்..! 

சுற்றங்கள் அதிகரிக்கட்டும்..! 

அன்பு அகிலத்தை ஆளட்டும்..! 

பண்பு சாமரை வீசட்டும்...!

புது தென்பு பிறக்கட்டும்..! 

புது மனிதம் பிறக்கட்டும்..! 

இனிமை எங்கும் பரவட்டும்..! 

இதயங்கள் ஒன்று சேரட்டும்..! 

இன்பம் எங்கும் பொங்கட்டும்...! 

துன்பம் விரைவில் தொலையட்டும்..! 

தை மகளே வருக வருக..! 

தைரியம் கொண்டு நீ  வருக வருக..! 
தன்னம்பிக்கை அள்ளித்தருக தருக..!
  
தன்னிகரில்லா விடியல்  தாங்கி 
தரணி எங்கும் இன்பம் பொங்கி தருக தருக ....!


அரசி நிலவன் 


1 comment:

  1. கவிதை வரிகள் அருமை...

    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete