Search This Blog

Thursday 9 January 2014

தோல்வி...!!!


விழுந்து கிடக்கின்றோம்..!
எழுந்து எக்காளமிட்டு
சிரித்து நிற்கின்றது தோல்வி...!

எழுந்து நிற்க முயற்சியும்
விழுந்திடாமல் எச்சரிக்கையும் தாங்கி
தளர்ந்திடாமல் நடக்கின்றோம்...!

செழித்து வளரும் தன்னம்பிக்கை பயிருக்கு
செம்மையாய் துணிவு என்னும் உரமிட்டு
விழித்திருந்து காவல் புரிகின்றோம்...!

கிண்டல்களும் வதந்திகளும்
ஓய்ந்து செல்ல வற்புறுத்துகின்றன...!
தோல்விகளும் கேலிகளும் நம்பிக்கையினை
மேய்ந்து சென்றிட துடிக்கின்றன....!

எட்டி எட்டி நுனிப்பயிரை நாக்கால்
தொட்டு தொட்டு பார்க்கின்றன....!
பட்டு விட்டு எட்ட செல்லும் பயிர்களால்
சொட்டு சொட்டாய் நாவில் நீருற அங்கலாய்த்து
காத்திருக்கின்றன தோல்வியுடன்...

தோல்வி எம்மை தோற்க நினைத்தது
தோல்வியினை தோற்கடிக்கின்றோம் - எம்
அசராத நம்பிக்கையால்....


அசையாமல் தலை குனிந்து நிற்கும் தோல்வியே
அடிக்கடி நீ எம்மை அரவணைத்தாலும்
ஆழமாய் உன்னை புரிந்து கொண்டு
ஆணித்தரமான உறுதி பூண்டு காத்திருக்கின்றோம்...!
ஆற்றல்கள் ஒரு போதும் அழிந்திடுவதில்லையே...!

பலவீனங்களையும் பலங்களையும்
படித்துக்கொண்டோம் உன்னிடம்
புகழும் வெற்றியும் கொண்ட மமதையில் நீதான்
புரிந்து கொள்ளவில்லை முழுதாக எம்மை

தோல்வி என்பதை மீண்டும் நெருங்க விடாமல்
தோற்றம் பெற்றுக்கொண்டிருக்கின்றோம்
தோல்வி என்பதே எங்கள் அகராதியில்
தோன்றிடப்போவதில்லை இனி ஒரு போதும்...!!!

தோல்வியே சுகித்திரு இனித்திரு - உனை
தோண்டிப் புதைக்கும் காலம் வரை...


அரசி நிலவன்




1 comment:

  1. தன்னம்பிக்கை தரும் வீரமிகு வரிகள்...

    ReplyDelete