Search This Blog

Wednesday 20 May 2015

பெண்ணாய் பிறந்த பிறப்பை எண்ணி பெரும் வேதனைப்பட்டிருப்பாய்....!!

வித்தியா...!
உந்தன் நினைப்பிலே விம்முகின்றது
உள்ளமடி.....!


உந்தன் முகம் காணும் போதெல்லாம்
உயிர் மரணிக்கும் வலி
உணருகின்றேன்..!


உன்னை எனக்குத் தெரியாது
உள்ளம் ஏனோ பதறுகின்றது
கணமும்.....

நீ துடித்த துடிப்பும் அவஸ்தையும்
மனக்கண்ணில் ஓட ஆற்றுப்படுத்த
முடியாமல் தோற்றுக் கலங்குகின்றேனம்மா..!

எத்தனை மணி நேரம் போராடினாயோ....??
என்ன என்ன நினைத்திருப்பாய்...!
பெண்ணாய் பிறந்த பிறப்பை எண்ணி
பெரும் வேதனைப்பட்டிருப்பாய்....!!

பெருமையடைந்த பதினெட்டு வருடங்களை
ஒற்றை நொடியில் வெறுத்து அழுதிருப்பாய்...!

உன்னிடத்தில் இருந்து சிந்திக்கின்றேன்...!
உன்னிலையில் இருந்து உணருகின்றேன்....!

நினைத்து பார்க்க முடியா கொடும் வேதனையடி....
நிறுத்திட முடியாமல் தடுத்திட முடியாமல்
கதறித் துடித்துப் போராடிப் போராடி
வேதனைப்பட்டது உன் அங்கம் மட்டுமல்ல
அந்த சின்னஞ் சிறிய இதயம் கூடவே

மனிதப் பேரவலம் ஒன்றின் நினைவேந்தலை
நினைவு கூரும் வேலைப்பளுவில் உன்னை
நினைக்கப் பலருக்கு நேரமில்லையாம்.....!!!

வேற்றினத்தவன் எம்மை தாக்கி அழித்தமைக்கு
ஆண்டாண்டு காலமாய் கோஷம் எழுப்பி வருகின்றோம்..!
என்ன நீதி கிடைத்து விட்டது????

எம்மினத்திற்குள் எங்கள் தலைமுறையினை
கடித்துக் குதறும் பேய்களை விரட்ட முடியாத
கையாலாகாதவர்கள் ஒற்றைப்படுகொலைக்கு
எதையும் கிழிக்க முடியாத எம்மால்
பேரவலம் ஒன்றிற்கு எதிராய்
என்ன தான் சாதிக்க இயலும்...???

உறங்க முடியாமல் கல்லறையில்
ஊமையாய் கண்ணீர் விடுகின்றாயோ...??

உனக்கு நேர்ந்த கொடுமையினை
எண்ணி திகைத்து வெருண்டு துடித்து
உருளும் உன் நிலை கண்டு துடிக்கின்றதடி
உள்ளம் வெகுவாக.....

என்ன என்ன நினைத்தாயோ..??
எப்படி எல்லாம் துடித்தாயோ..??

அன்புச்சோதரியே.....!
அழும் குரல் கேட்குதடி
அருகிலே யாருமின்றி - உனக்கு
நேர்ந்த கொடூரத்தை யாருக்கும்
சொல்லியழ முடியாமல்
தவியாய்த் தவிக்கின்றாயோ....?

உந்தன் தாய்மண்ணின் மடியில் - கண்
உறங்கிக் கொள்ளடி கண்மணியே
உந்தன் செவிகளை தீண்டும் நற்செய்தி
உனக்காக விரைந்து வருமடி...!

உந்தன் கண்ணீரும் துடிப்பும் கதறலும்
உருமாறும் விரைவில்.....!
உணர்த்திடும் உலகிற்கு....
பெருஞ்சாபமாகிடும்....!

உனக்கு இழைத்த பெருங்கொடூரத்திற்கு
ஈனப்பிறப்புக்களின் வம்சம்
கருவறுக்கப்படுவதாக.....!

எந்த உணர்வில் உன்னை கசக்கிப்போட்டார்களோ??
அந்த உறுப்பினை அடித்து கொய்து போடுக..!
பார்த்து பார்த்து ஏங்கிப் போகுமாறு அறுத்து எறிந்து
அழுகி நாற்றம் அடிக்க அடித்து உதைத்து
முச்சந்தியில் அம்மணமாக்கி
யாவரையும் காறித்துப்ப விடுக.......!

இதுவும் போதாது....
இன்னும் இன்னும் வேண்டும்...!
இழி பிறப்புக்களை
எட்டி உதைத்து தப்பி மிதித்து
எப்படியாகினும் உயிரோடு வைத்து
மெல்ல மெல்லக் கொல்க....!

அவள் துயரம் அடங்குமா???
அவள் மீண்டு வருவாளா??
அவள் வரவே மாட்டாள்....!!!
அவளைத்தான் மானபங்கப் படுத்தி
உலகம் எங்கும் விற்று விட்டார்களே???
எப்படி மீண்டு வருவாள் வித்தியா???

Thursday 23 April 2015

ஒரே நாளில்(20.04.2009) 476 சிறுவர்கள் உட்பட 1,496 தமிழர்கள் படுகொலையான, 3,333 உறவுகள் காயமடைந்த அந்த கறுப்பு ஏப்ரல் 2009 இன் கொடிய நாட்களின் உதிரம் தோய்ந்த நினைவுகள்....!



விம்மி வெடித்த அந்தக்கணப்பொழுதுகள்...
விழுந்து எழுந்து உயிர் துறந்த தருணங்கள்...
விடுதலை பெறுவோம் என்று நம்பி ஓடி
விண்ணைத்தொட்ட சொந்தங்கள் எத்தனையடா தமிழா...???

ஆயிரங்கள் தாண்டி அறுவடை ஆன இந்த நாட்கள்
ஆருக்கும் நினைவிருக்கோ???

எழுதி எழுதி குவிந்த எழுத்துக்கள் களைத்து போயிருக்கும்
எண்ணிலடங்கா எங்கள் உறவுகள் சிதறிப்போன நாட்களில்
சித்திரை 20,21,22, 23, 24, 25 நாட்காட்டியில் சிவப்பாய் 
இரத்தம் தோய்ந்து வடிவதாய் ஒரு பிரமை....!

பாதுகாப்பு வலயம் என்று கூவி அழைத்து
பாழ்பட்டு போன படைகள் எங்கள் உறவுகளை
மனிதக்கேடயங்களாக மனிதாபிமானமற்று
கொன்று குவித்து எங்கள் மண்ணுக்கு மிகையான
உதிரங்களை வாரி இறைத்த நாட்கள் ...!

பதுங்கி இருந்த பதுங்கு குழிகளை பார்த்து பார்த்துவீசிய
விதம் விதமான குண்டுகளால் மூச்சுத்திணறியும்
எரிகாயங்கள் பட்டும் உடல் சிதறியும் படுகொலையான
எம்மின உறவுகளின் கதறல் ஒலி இன்னும் ஒலித்துக்
கொண்டேதான் இருக்கும்....!

மூடர்களின் மூர்க்கத்தனமான அகோரத்தாக்குதல்களால்
மூச்சிழந்து போன உறவுகள் ஒரே நாளில் ஆயிரத்தை
தாண்டிப்போன கொடுமை....!
உடலங்கள் யாவும் உருக்குலைந்தும் சிதறியும்
உதிர ஆறு ஓடிய அவலத்தின் உச்சம் பெற்ற நாட்கள்...! 

கொன்று குவித்தவனுக்கு நினைப்பே இருக்காது
கொடுமை என்று கண்ணீர் விட்ட நாமும் ஆறு ஆண்டுகளில்
கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து கொண்டிருப்போம்....!
கொல்லப்பட்ட உறவுகளின் எச்சங்கள் - அங்கே
கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக்கொண்டிருக்கும்
கொடுமை யார் அறிவாரடா தமிழா...??

ஈருடலும் ஒருடலுமாய் இருந்தவன்
இரத்தமும் சதையுமாய் சிதறுண்டு  போனதை
கண்டும் நடைப்பிணமாய்வாழும் மனைவிகளின்
மனநிலை யார் அறிவீரோ???

இன்னும் அந்த அதிர்ச்சிகளில் இருந்து மீளாமல்
இருக்கின்ற நிலை தெரியாமல் சித்தம் கலங்கிய
உள்ளங்களின் ஏக்கம் அறிவீரோ???

உயிர் கொடுத்தவர்கள் யார் என்றே தெரியாமல் - அவர்கள்
உரமாகி போன மண்ணில் வீடு கட்டி விளையாடும்
பிஞ்சுகளின் எதிர்காலம் யார் கையில்....???

பிய்த்து போட்ட உடலையும் மாண்டு போன எலும்புகளையும்
அணைத்துக்கொண்டு ஒப்பாரிவைக்கும் எங்கள் தமிழ் ஈழ
மண்ணின் குரல் கேட்கின்றதா???

யார் மறந்தாலும்......
யார்மறுத்தாலும்......

முடிந்து போன யுத்த வடுக்களை தாங்கி நிற்கும்
அன்னை மண்ணில் அழியாத வடுக்களாய் இந்த நாட்கள்
அங்கே ஒவ்வொரு வீட்டிலும் விம்மலாய் கண்ணீராய்
நினைவாக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கும்....!!!



அரசி நிலவன்
ஒரே நாளில்(20.04.2009) 476 சிறுவர்கள் உட்பட 1,496 தமிழர்கள் படுகொலையான,  3,333  உறவுகள் காயமடைந்த அந்த கறுப்பு ஏப்ரல் 2009  இன் கொடிய நாட்களின் உதிரம் தோய்ந்த நினைவுகள்....!
=========================================

விம்மி வெடித்த அந்தக்கணப்பொழுதுகள்...
விழுந்து எழுந்து உயிர் துறந்த தருணங்கள்...
விடுதலை பெறுவோம் என்று நம்பி ஓடி
விண்ணைத்தொட்ட சொந்தங்கள் எத்தனையடா தமிழா...???

ஆயிரங்கள் தாண்டி அறுவடை ஆன இந்த நாட்கள்
ஆருக்கும் நினைவிருக்கோ???

எழுதி எழுதி குவிந்த எழுத்துக்கள் களைத்து போயிருக்கும்
எண்ணிலடங்கா எங்கள் உறவுகள் சிதறிப்போன நாட்களில்
சித்திரை 20,21,22, 23, 24, 25 நாட்காட்டியில் சிவப்பாய் 
இரத்தம் தோய்ந்து வடிவதாய் ஒரு பிரமை....!

பாதுகாப்பு வலயம் என்று கூவி அழைத்து
பாழ்பட்டு போன படைகள் எங்கள் உறவுகளை
மனிதக்கேடயங்களாக மனிதாபிமானமற்று
கொன்று குவித்து எங்கள் மண்ணுக்கு மிகையான
உதிரங்களை வாரி இறைத்த நாட்கள் ...!

பதுங்கி இருந்த பதுங்கு குழிகளை பார்த்து பார்த்துவீசிய
விதம் விதமான குண்டுகளால் மூச்சுத்திணறியும்
எரிகாயங்கள் பட்டும் உடல் சிதறியும் படுகொலையான
எம்மின உறவுகளின் கதறல் ஒலி இன்னும் ஒலித்துக்
கொண்டேதான் இருக்கும்....!

மூடர்களின் மூர்க்கத்தனமான அகோரத்தாக்குதல்களால்
மூச்சிழந்து போன உறவுகள் ஒரே நாளில் ஆயிரத்தை
தாண்டிப்போன கொடுமை....!
உடலங்கள் யாவும் உருக்குலைந்தும் சிதறியும்
உதிர ஆறு ஓடிய அவலத்தின் உச்சம் பெற்ற நாட்கள்...! 

கொன்று குவித்தவனுக்கு நினைப்பே இருக்காது
கொடுமை என்று கண்ணீர் விட்ட நாமும் ஆறு ஆண்டுகளில்
கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து கொண்டிருப்போம்....!
கொல்லப்பட்ட உறவுகளின் எச்சங்கள் - அங்கே
கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக்கொண்டிருக்கும்
கொடுமை யார் அறிவாரடா தமிழா...??

ஈருடலும் ஒருடலுமாய் இருந்தவன்
இரத்தமும் சதையுமாய் சிதறுண்டு  போனதை
கண்டும் நடைப்பிணமாய்வாழும் மனைவிகளின்
மனநிலை யார் அறிவீரோ???

இன்னும் அந்த அதிர்ச்சிகளில் இருந்து மீளாமல்
இருக்கின்ற நிலை தெரியாமல் சித்தம் கலங்கிய
உள்ளங்களின் ஏக்கம் அறிவீரோ???

உயிர் கொடுத்தவர்கள் யார் என்றே தெரியாமல் - அவர்கள்
உரமாகி போன மண்ணில் வீடு கட்டி விளையாடும்
பிஞ்சுகளின் எதிர்காலம் யார் கையில்....???

பிய்த்து போட்ட உடலையும் மாண்டு போன எலும்புகளையும்
அணைத்துக்கொண்டு ஒப்பாரிவைக்கும் எங்கள் தமிழ் ஈழ
மண்ணின் குரல் கேட்கின்றதா???

யார் மறந்தாலும்......
யார்மறுத்தாலும்......

முடிந்து போன யுத்த வடுக்களை தாங்கி நிற்கும்
அன்னை மண்ணில் அழியாத வடுக்களாய் இந்த நாட்கள்
அங்கே ஒவ்வொரு வீட்டிலும் விம்மலாய் கண்ணீராய்
நினைவாக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கும்....!!!



அரசி நிலவன்