Search This Blog

Saturday 30 January 2010

ஏழையின் ஆசை...!!!



அலங்காரக்கந்தனவனின்..
அழகு வீதி தனில்,,,
அலை அலையாய் மோதி வரும் கூட்டத்தில்
அப்பாவின் கை பற்றியபடி நான்..!!
அரோகரா ஓசையிலும்
அரைகுறையாய்...,
”அம்முக்குட்டி கையை விடாதே..”
அடிக்கடி முணு முணுத்தது..
அப்பாவின் குரல்...!!!

அசைந்தாடிடும்
அலங்காரப்பொம்மைகள்...!
அதிசயமான விளையாட்டு கார்கள்..!
அலங்காரமாய் அங்காடிகள்..!
அங்கலாய்த்தபடி நான்..!!!

அப்பாவின் கரங்களை
அசைத்து...
அப்பாவியாய் நடித்து,,
அள்ளி வீசினேன்..!!
அவரை நோக்கி ஏக்கப்பார்வை ஒன்றை...

என் முயற்சி பலனளிக்க...
அடுத்த நிமிடம்
அங்காடி முன்னால்..

ஆவலோடு பொம்மை ஒன்றை..
ஆட்காட்டி விரல் காட்ட...
ஆயிரம் ரூபாய்கள் என ஒரு பதில்..!!
ஆசையோடு நான் கேட்டதால்...
இல்லாத பணத்தினை
இருக்கின்ற சட்டைப்பையில்..
தந்தையவர்...
தட்டுத்தடுமாறி...தேட...

தலை குனிய வைக்குமோ
தந்தையினை...????
????

”பிடிக்கவில்லை”
உரைத்த என்னை...
கண்ணீரோடும்...,,
கருணையோடும்,,
நோக்கின இரு விழிகள்..!!!
அரவணைத்தன கரங்கள்..!!
காணாமல் போய் விட்டது..!!
பொம்மை மேல் உண்டான ஆசை..!!!

”அரசி”

Friday 29 January 2010

இந்த காதலியின் இதயத்திற்கு நிகராய்... கட்ட முடியுமோ ஒரு தாஜ்மஹால்...!!!






நர்த்தனம் ஆடிடும் அகல விழிகொண்டு,
நறை ஒழுக பேசிடும் செவ்வாய் மலர்ந்து,
சிறுக சிறுக சேர்த்து வைத்தநாணங்களெல்லாம்
சிந்தி சிதற செப்பினாளே ஒரு காதல் மொழி...

கண்ணில் தெரியும் குறும்புத்தனம்
காணாமல் போய் -அதில்
காதல் உட்கார்ந்து கொண்டது...
துள்ளி திரிந்த சின்ன மங்கை இவளை,,
பூமிக்கு நோகாமல் நடக்க வைத்தது
ஒரு உயிர்க் காதல்...!!!

காற்றோடு மெல்ல பேசினாள்..
காதலனை கண் பார்த்தால்,,,,,
கன்னங்கள் செவ்வானமாகும்..!!
கண்கள் இமைக்கும் கோடி முறை...

குழைந்து குழைந்து மழலை மொழி பேசி
குறும்புத்தனமாய் சின்ன சின்ன
குழப்படிகள் அரங்கேற்றும் சுட்டி
குழந்தையாய் ஒரு இதயமதில் தவழ்ந்தவளின்,,,
குட்டி குறும்புகள் மறைந்து,,
குரூரமாய் அவள் மாற்றம் பெற,,
காரணமாகிவிட்டது அதே உயிர்க்
காதல்.....!!!



காதலனின் கண் பார்க்க...
காதலோடு,,,
காத்திருக்கும்,,,முதிர் கன்னியாய்...
காலத்தோடு போராடும்,, முதியவளாய்...
காணும் இடமெல்லாம்,
காதலனின் அசைவை,
காண்கின்ற பைத்தியக்காரியாய்...
காறி உமிழ்கின்ற கூட்டத்திற்கு அசிங்கமாய்...
காட்சிப்படுத்தி விட்டு, ஏகியவனை நினைத்து,
காலமெல்லாம் கண்ணீர் வடிக்கும்,,,இந்த
காதலியின் இதயத்திற்கு நிகராய்...
கட்ட முடியுமோ ஒரு தாஜ்மஹால்...!!!

"அரசி

எப்போது,, வாழ்வோடு போராடி வாழ்ந்து முடிப்பது...???





பசி நேசமாகியது..
பணம் தூரமாகியது..
உறக்கம் வீதிக்கு வீதி
மாற்றம் கண்டது...!

வறுமையோடு போராடும்,
துரதிஷ்டசாலி நான் - எப்போது
வாழ்வோடு போராடி,
வாழ்ந்து முடிப்பது...?

"கல்வி" என்பதை எழுதி பார்ப்பதற்கும்,
கற்றதில்லை நான்...
கண்டு கேட்டு பார்வையால் அனுபவித்து..,
கண் மூடி கனா காண்பதற்கு கூட
உறக்கம் என்னை அனுமதிக்காது...
உண்டி சுருங்கிய எனக்கு,,,
கொடும் பனியும்,,,
கோடை வெயிலும்
பழகிப்போன தோழர்கள்..!

இளம் பிஞ்சு சிசுக்களையும்..,
கர்ப்பிணித்தாய்மாரையும்,,
இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்து
இனமொன்றை சுத்திகரித்த,
இறைவனே...!!!
இயலாமையோடு தள்ளாடும் - எனக்கு
இயமன் அழைக்கும் நாளை முன்னுக்கு
இட்டு கொடு...!!!

" அரசி "