Search This Blog

Friday 29 January 2010

எப்போது,, வாழ்வோடு போராடி வாழ்ந்து முடிப்பது...???





பசி நேசமாகியது..
பணம் தூரமாகியது..
உறக்கம் வீதிக்கு வீதி
மாற்றம் கண்டது...!

வறுமையோடு போராடும்,
துரதிஷ்டசாலி நான் - எப்போது
வாழ்வோடு போராடி,
வாழ்ந்து முடிப்பது...?

"கல்வி" என்பதை எழுதி பார்ப்பதற்கும்,
கற்றதில்லை நான்...
கண்டு கேட்டு பார்வையால் அனுபவித்து..,
கண் மூடி கனா காண்பதற்கு கூட
உறக்கம் என்னை அனுமதிக்காது...
உண்டி சுருங்கிய எனக்கு,,,
கொடும் பனியும்,,,
கோடை வெயிலும்
பழகிப்போன தோழர்கள்..!

இளம் பிஞ்சு சிசுக்களையும்..,
கர்ப்பிணித்தாய்மாரையும்,,
இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்து
இனமொன்றை சுத்திகரித்த,
இறைவனே...!!!
இயலாமையோடு தள்ளாடும் - எனக்கு
இயமன் அழைக்கும் நாளை முன்னுக்கு
இட்டு கொடு...!!!

" அரசி "

No comments:

Post a Comment