Search This Blog

Friday 29 January 2010

இந்த காதலியின் இதயத்திற்கு நிகராய்... கட்ட முடியுமோ ஒரு தாஜ்மஹால்...!!!






நர்த்தனம் ஆடிடும் அகல விழிகொண்டு,
நறை ஒழுக பேசிடும் செவ்வாய் மலர்ந்து,
சிறுக சிறுக சேர்த்து வைத்தநாணங்களெல்லாம்
சிந்தி சிதற செப்பினாளே ஒரு காதல் மொழி...

கண்ணில் தெரியும் குறும்புத்தனம்
காணாமல் போய் -அதில்
காதல் உட்கார்ந்து கொண்டது...
துள்ளி திரிந்த சின்ன மங்கை இவளை,,
பூமிக்கு நோகாமல் நடக்க வைத்தது
ஒரு உயிர்க் காதல்...!!!

காற்றோடு மெல்ல பேசினாள்..
காதலனை கண் பார்த்தால்,,,,,
கன்னங்கள் செவ்வானமாகும்..!!
கண்கள் இமைக்கும் கோடி முறை...

குழைந்து குழைந்து மழலை மொழி பேசி
குறும்புத்தனமாய் சின்ன சின்ன
குழப்படிகள் அரங்கேற்றும் சுட்டி
குழந்தையாய் ஒரு இதயமதில் தவழ்ந்தவளின்,,,
குட்டி குறும்புகள் மறைந்து,,
குரூரமாய் அவள் மாற்றம் பெற,,
காரணமாகிவிட்டது அதே உயிர்க்
காதல்.....!!!



காதலனின் கண் பார்க்க...
காதலோடு,,,
காத்திருக்கும்,,,முதிர் கன்னியாய்...
காலத்தோடு போராடும்,, முதியவளாய்...
காணும் இடமெல்லாம்,
காதலனின் அசைவை,
காண்கின்ற பைத்தியக்காரியாய்...
காறி உமிழ்கின்ற கூட்டத்திற்கு அசிங்கமாய்...
காட்சிப்படுத்தி விட்டு, ஏகியவனை நினைத்து,
காலமெல்லாம் கண்ணீர் வடிக்கும்,,,இந்த
காதலியின் இதயத்திற்கு நிகராய்...
கட்ட முடியுமோ ஒரு தாஜ்மஹால்...!!!

"அரசி

No comments:

Post a Comment