Search This Blog

Sunday 17 April 2011

நிலவாய் என் வாழ்வில் உதித்த நிலவனே...!!!



இருளோடு ஒளிந்து

இரும்பு நெஞ்சமது துவண்டு

இடுக்கண் இமயமாய் பெருகி வர..

இதமாய் ஒரு நன்மொழி பேசி,,

இதயத்தை வருடி - மெல்ல

இன்பம் நல்கிய இனியவனே..!!!



நினைப்பை

நிஜமாக்கி - பால்

நிலவாய் என் வாழ்வில் உதித்த

நிலவனே...!!!



பத்தாண்டு உறவாய்

பக்குவமாய் என்னை - உன்

இதயமதில் இருத்திக்கொண்ட

இதயவனே..!!!



உண்மைகள் பல

உணர்த்தப்பட்டும் எனை

உயிராய் தாங்கும் - என்

உயிர் கொண்ட தெய்வமே..!!!



காதல் கணவனே..!!!

காலங்கள் கடந்தாலும்,,

என் நெஞ்சமதில் உன்னை இருத்தி,,

என்றென்றும் பூஜிப்பேன்

என் இறையாக......

என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....!!!! 


அரசி 

3 comments:

  1. அருமையான கவிதை. இதை நான் என் காதலன் பிறந்தநாள் வாழ்த்தாக அனுப்ப போகிறேன்

    ReplyDelete
  2. கன காலத்தின் பின்பு ஒரு அழகிய கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எனது பிறந்தநாள் வாழ்த்துக்களும்

    ReplyDelete