Search This Blog

Thursday 26 December 2013

ஆழித்தாயவள் ஆடிய ஊழித்தாண்டவம் ..!!!


அன்றொரு நாள் அதிகாலை
அடங்கியிருந்த கடல்
ஆர்ப்பரித்துக்கொண்டது....!!

அறியாத ஆழிப் பேரலையினை
அண்ணாந்து நோக்கிய அருமந்த உயிர்கள்
அள்ளிக்கொள்ளப்பட்டனர்...!!


ஆழித்தாயவள் ஆடிய
ஊழித்தாண்டவத்தினால் - அரை
நாழி யில் அரை நூறாயிரம் உறவுகள்
நிரை நிரையாய் மாண்டனர்....!!

கரை தாண்டி வந்து இழுத்து உன்
இரை ஆக்கிப்போன தண்ணீரே...!
தரை யில் நாம் சிந்தும் கண்ணீர்
ஆழியின் ஆழத்தினை தாண்டி
வரை யறை இன்றி நிரம்பி வழிகின்றதே..!


கடலே அலையே நீ மறந்திருப்பாய்...!!
உடலே உயிரே நீங்கள் மறைந்திருப்பீர்கள்..!!
சுவடுகளும் சுழிக்குள் உறங்கியிருக்கும்..!!

சுமைகளாய் உங்களின் அந்த  இறுதித்தருணங்கள்
அமைந்த அந்த நாளும் நொடிப்பொழுதும் - எம்மை
ஊமை ஆக்கி நகருகின்றன....!
இமை திறந்து பெருகும் விழிநீர்
இன்னொரு ஆழிப்பேரலையாய்
ஒவ்வொரு ஆண்டும் எமக்குள்
அடித்து ஓய்கின்றது....!!


கரம் கூப்பி தொழுது வாழ
வரம்  கொடுத்த தாயவளின்
மடி சேர்ந்திட்ட அனைத்து உறவுகளையும்
அடி பணிந்து அஞ்சலி செலுத்தி நினைவு கூறுவோம்...!!!


அரசி நிலவன்


No comments:

Post a Comment