Search This Blog

Friday 27 December 2013

நிழற்படங்கள் நினைவிலும்.... 
காணொளிகள் கண்ணீரிலும் கரைந்து.. 
காணாமல் போகின்ற காலம் அல்லவோ??
காணும் போது ஒரு துடிப்பு...! 
காட்சியில் ஒரு பதறல் வேதனை கருத்துக்களுடன்
காலாவதியாகி போகும் காலச்சக்கரம்...!!!

பரிதாபங்கள் சிந்தப்பட்டு... 
வசைமாரிகள் தெளிக்கப்பட்டு...
வரலாறு மாற்றப்பட்டு.... 
வம்சங்களின் மரபணுக்களும் 
வகையில்லாமல் ஒன்றாகிப்போன காலம்....!!!
  
கலைந்த உண்மைகளை 
கற்பனையில் தேடி  
கனவில் கண்டு பிடித்து 
கனன்ற இதயங்களை ஆற்றுப்படுத்தும் 
கலி காலமதில்....
கண்டும் கேட்டும் கடந்து போனவைகளும் 
காட்சியாய் மட்டுந்தான்.....
காலம் பதில் சொல்ல 
காத்திருக்காது....!!!
கண்ணீராயும் கவிதையாயும் 


==============================================



No comments:

Post a Comment