Search This Blog

Monday 30 December 2013

கானகம்..!!!

தொலைத்த முகவரி...!
தொடரும் சிறை வாழ்வு..!

இணையம் புகுந்து
இதயம் உலாவுகின்றது..!

முகப்புத்தகத்தில் காணும்
முகத்தரிசனங்கள்...!

தனித்திருந்து உரையாடல்
தொலைபேசியில்....

பார்த்துச்சிரித்து
கிண்டல் பேசி
கதையளக்க
காக்கா குருவியும் இல்லை....!

கட்டிலோரமாய்
எட்டிப்பார்க்கும் கரப்பானும்
காலடி ஓசையில்
காணாமல் போகின்றது....
நட்பாடல் புரிய வருவதை
அறியாமலேயே....

கானகத்து வாழ்வு போல...
காய்ந்து போன ஒரு உலர் வாழ்வு...!

இல்லை இல்லை...!
கானகத்தில் கூட தனித்திருக்கலாம்..!
காடு மேடெங்கும் ஆடிப்பாடலாம்..!
கானக்குயிலுக்கு தாளம் போடலாம்..!
வண்ண மயிலோடு சேர்ந்து ஆடலாம்..!
புள்ளி மானோடு துள்ளி ஓடலாம்..!
பஞ்சு முயலோடு கொஞ்சி விளையாடலாம்..!

தாவிப்பாயும் மந்திகளோடு சேர்ந்து தாவலாம்..!
சின்னஞ்சிறு அணிலோடு கதை பேசலாம்..!
சிங்கம் புலி பார்த்து கிலி கொள்ளலாம்..!
குள்ள நரியோடு தந்திரம் பழகலாம்..!

கற்பனையிலும் கானகம்
களிப்புடன் மிளிர்கின்றது..!

மனித வாசம் அற்றாலும்
மனிதம் அங்கு வாழலாமே..!

செங்கற்சுவர்களால்
செழுமையாய் மூடப்பட்டு
சடப்பொருட்கள்  சூழ
சடமாகிப்போன வாழ்விது..!

கானகத்து வெறுமையும் தோற்று விடும்..!
வானகம் தொட்டு நிற்கும் வசிப்பிடத்து
தனிமை ஏங்கித்தவிக்கின்றது
உயிர்களின் வாசத்திற்காய்....!!!

அரசி நிலவன் 

1 comment:

  1. அருமையான கவிதை...

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete