அஞ்சிய தருணங்களையும் மலையாய்
விஞ்சிய துன்பங்களையும் அள்ளிப்போட்ட
பஞ்சுக்குவியலாய் காற்றிலே பறக்க வைத்து....
கொஞ்சிப்பேசி நெஞ்சம் நிறைந்து நிற்கும் பிஞ்சுகள்....!
கெஞ்சி நாடி தடவி சிமிட்டி சிரிக்கும் இளம் பிஞ்சுகள்...!
கஞ்சம் கொண்ட உள்ளமாய் இரண்டாய் அளந்து கொண்டதேனோ...?
வஞ்சம் இன்றி வகை தொகையாய் இல்லம் நிரப்பி கொள்ள
நெஞ்சம் அங்கலாய்ப்பது காலங்கடந்த அறிவன்றோ..?
பஞ்சம் ஆகிய நிம்மதி வாழ்வில் தஞ்சம் கொண்டவனின் பிரிவை
நெஞ்சம் நினைத்திட அனுமதிக்காத பிஞ்சுகளின் வதனங்கள்..!
கவலை நீக்கிகளாக
கருணையின் பிறப்பிடங்களாக
களிப்பின் ஊற்றுக்களாக
கண்ணான முத்துக்களாக
கனிவுடன் என்னுள் வித்தாகி
கரும்பினை ஒத்து வாழ்வில் இனிக்கும்
கனியின் பிஞ்சுகள்
விடாது தொடர்ந்த இடர் கண்டு நஞ்சான நெஞ்சம்
படாது படர்ந்த வலிகள் பிஞ்சுகளால் கொஞ்சம்
தொடாது போவதும் அவர்களின் கள்ளச்சிரிப்பால் தானோ...
விஞ்சிய துன்பங்களையும் அள்ளிப்போட்ட
பஞ்சுக்குவியலாய் காற்றிலே பறக்க வைத்து....
கொஞ்சிப்பேசி நெஞ்சம் நிறைந்து நிற்கும் பிஞ்சுகள்....!
கெஞ்சி நாடி தடவி சிமிட்டி சிரிக்கும் இளம் பிஞ்சுகள்...!
கஞ்சம் கொண்ட உள்ளமாய் இரண்டாய் அளந்து கொண்டதேனோ...?
வஞ்சம் இன்றி வகை தொகையாய் இல்லம் நிரப்பி கொள்ள
நெஞ்சம் அங்கலாய்ப்பது காலங்கடந்த அறிவன்றோ..?
பஞ்சம் ஆகிய நிம்மதி வாழ்வில் தஞ்சம் கொண்டவனின் பிரிவை
நெஞ்சம் நினைத்திட அனுமதிக்காத பிஞ்சுகளின் வதனங்கள்..!
கவலை நீக்கிகளாக
கருணையின் பிறப்பிடங்களாக
களிப்பின் ஊற்றுக்களாக
கண்ணான முத்துக்களாக
கனிவுடன் என்னுள் வித்தாகி
கரும்பினை ஒத்து வாழ்வில் இனிக்கும்
கனியின் பிஞ்சுகள்
விடாது தொடர்ந்த இடர் கண்டு நஞ்சான நெஞ்சம்
படாது படர்ந்த வலிகள் பிஞ்சுகளால் கொஞ்சம்
தொடாது போவதும் அவர்களின் கள்ளச்சிரிப்பால் தானோ...