Search This Blog

Wednesday 30 July 2014

ஊதுகுழல்..!

ஆரவாரமாய் வரவேற்கின்ற கோயில் திருவிழா
ஆடை காட்டி பகடு காட்ட வென்றே ஒரு சாரார்
மேடை போட்டு இசைமழை கொட்ட ஒரு சாரார்
சாடை காட்டி காதல் பண்ணவென்றே  இளம் பராயத்தார்
நடை பழகி நகை நட்டு மினுக்க ஒரு சாரார்
மடை திறந்த சனத்திரள் வெள்ளத்தில் அபகரிக்கவேன்றே
படை எடுத்து வரும் ஒரு சாரார்
கொடை ஆகி போன வறுமை வாழ்விற்கு சிறு வெளிப்பாக
கடை போட்டு கச்சான் வித்து கடன் அடைக்க வென்று ஒரு சாரார்
தடை இன்றிய வீதியில் அங்காடிகள் பரப்ப ஒரு சாரார்
படை எடுத்து வந்து அலை மோத என்றே ஒரு சாரார்

கடந்து போன திருவிழாவில் தவறிப்போன ஆசை
கட்டாயம் கச்சான் வித்து வாற காசில இந்த முறை தம்பியின்
கனவு நிறைவேற்றுவேன் என்ற அசையாத நம்பிக்கையில்
கசங்கிய உடையோடு பாசக்கார அண்ணனாய் ஒருவனும்
எதிர்பார்த்த திருவிழா இனிதே வந்தது...
ஏங்கி ஏங்கி தவித்தவன் அள்ளி அள்ளி விற்றான்
தூங்கி வழிந்த விழிகள் மலர்ந்து கொண்டது

ஓடிச்சென்றான் ஆசையுடன் வாங்கினான்
பாடி ஆடி சென்றான் பாங்குடனே தம்பிக்கு
பக்குவமாய் கையில் கொடுத்தான்....
பரிவுடன் அணைத்தான்....

தம்பியின் மகிழ்வுக்கு எல்லையில்லை
தவித்து ஏங்கிய அந்த ஊதுகுழல் கைகளில்
அளித்த அண்ணனுக்கு ஆசையாய் ஒரு முத்தம்
அன்பின் மழையில் நனைந்தான் அண்ணா

ஊதுகுழலில் தம்பியின் மூச்சு இனிமையாய் ஒலித்திட
ஊதுகுழலாய் அண்ணனின் இதயம்  சந்தோஷ சாரலை
ஊதிக்கொண்டே இருந்தது....!






1 comment:

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete