அகம் வாழும் நினைவுகளை
அசை மீட்டி அசை மீட்டியே
அலுத்து போகின்றது...!
வெறும் நினைவுகளாய்
சோபையிழந்து போனவைகள்..!
உயிரற்று நாற்றம் வீசுபவைகள்
தோண்டி துருவியெடுத்து
ஆராய்ச்சி பண்ணும் புதைகுழியின்
மனித எச்சங்களாய் இவை பலனற்றவை..!
இருந்தும் அசை மீட்டி பார்த்து
இதயம் கனத்து போவதே மிச்சம்
அகத்தை அழித்து போட
அறிவியல் இன்னும் வளரவில்லை...!
ஆழிப்பேரலை அடித்து செல்ல முடியாமல்
அகம் எனக்குள்ளே ஒளிந்து கிடக்கின்றது...!
அடி மனதில் ஓர் எண்ணம்
அடிக்கடி அங்கலாய்ப்பில்....
நாறிய அகம் உயிர் பெற்றிடும்
நாளை நற்செய்தி ஒன்று செவியில் விழுந்திடும் என
அந்தோ
நாட்கள் மின்னல் வேகத்தில் கடக்கின்றது
அகம் இங்கே தவித்துக் கிடக்கின்றது - அட
அலைகள் கூட தொட மறுக்கின்றது
அமிழ்த்தும் அகத்தின் கனம் தாங்காமல் அவை
அகன்று போகின்றனவோ கடல் தாண்டி - அன்றி
அகத்தை தொட்டால் பிரளயம் ஒன்று உருவாகிடும் என்று
அறிந்து போகின்றனவோ...?
சிறந்த கவிவரிகள்
ReplyDeleteஅருமை
ReplyDelete