Search This Blog

Thursday 24 April 2014

அதிர்ச்சி...!!!


இப்பவெல்லாம் இஞ்சை வாகனம் வருவதும்
இல்லாத கதை சொல்லி பூசாவுக்கு விருந்து
படைக்கவென்றே  கூட்டிச்செல்வதும் வழமையா போச்சு...

இன்றும் என் வீட்டுக்கு முன்னால்
இரைந்து வந்து நின்றது இரு கவச வாகனங்கள்
இதென்ன கொடுமை என்று எட்டிப்பார்த்தேன்...!

இளசுகள் எங்கட வீட்டில் இல்லையே..
இவங்கள் என்னை தான் கொண்டு போவாங்களோ
இதயம் துடிக்க அதிர்ச்சியோடு நோக்கினேன்...!

எழுந்து இரண்டடி எடுத்து வைத்தால் - மூட்டு
எலும்பு எல்லாம் ஒடிந்து விழும் நிலையில்

எப்ப போய் சேருவன் என்று முணு முணுக்கும்
எதிர் வீட்டு பாட்டியை கையில் பிடித்து தர தர என்று

இழுத்தபடி வந்து கொண்டிருந்தார்  உயர் திரு புலனாய்வாளர்...!
இழுக்கின்ற இழுவையிலே கை ஒடிந்து விடும் நிலை தான்...

அடக்கொடுமையே...!
"அய்யே மொனவத பிரஸ்னே.."
பரிதாப்பட்டு நான் கேட்டேன்....!!!
"கொட்டியா  கொட்டியா
கொழும்பெட்ட கெனியனவா.."
புலியை பிடிச்ச
புலனாய்வு அதிகாரி பெருமிதமாய் சொல்லியபடி
புளுகத்தொடு வாகனத்தில் ஏறினார்...!

பாட்டி கொட்டியாவா ??
பாதி அதிர்ச்சி மீளாத நிலையில் நான்...!


பாட்டிக்கு விளங்கிச்சோ தெரியலை
பாழ்பட்டு போவார்...!
பாடையில போக இருக்கிறதையும்
பாவிகள் பூஸா கொண்டு போறாங்கள்...!
பூஸா போறதுக்கிடையில் பாட்டி அதிர்ச்சியில்
வீசா எடுத்திடுவாள் சொர்க்கத்திற்கு...!





No comments:

Post a Comment