Search This Blog

Monday 7 April 2014

முணு முணுப்பு....!!!

கல்லை யும் கண்ணீர் விடத்தூண்டும்
எல்லை யில்லா சோதனைகள்...!

தொல்லை என்று தூரம் சென்ற - நேற்று
பல்லை க்காட்டி நின்ற பச்சோந்தி உறவுகள்..!

வில்லையும் முறித்து விட்டேன்
அம்பு அடிக்கடி துரத்துகின்றது...!
விடுவதாயில்லை....!

சும்மா இருப்போரின் நாவுகள் சுட்டுத்தள்ளும் - கொடும்
சுடு சொல்லையும் மென்று விழுங்கி விட்டேன்...!

அந்தோ கொடுமை விழுங்கியவைகள் உள்ளிருந்த படி
மெல்ல மெல்ல சுட்டு கருக்குகின்றது இதயத்தினையும்...

காலங்கடந்து போன காத்திருப்பு..!
காலாவதியாகிய நம்பிக்கை..!
ஆனாலும் உயிருடன் தான்
ஆடிப்போகின்றது மெல்ல வாழ்க்கை....!

உறவுகள் என்ற பலர் முணு முணுத்து மறந்தும் போயினர்..!
உலகில் தெரிந்தவர்கள் என்ற சிலரும் காணாமல் போயினர்..!
உடன் இருப்பவர்கள் மெல்ல மெல்ல முணு முணுத்து கொண்டே
உணர்விழந்து போகின்றார்கள் என்னால்...!

இருக்காதா பின்னே
இந்தளவு காலமோ...?
இப்படியும் சோதனையோ..?
சமயத்தில் நானே
முணு முணுப்பதுண்டு...!

ஆனாலும் நான் முணு முணுப்பது
ஆலயத்தில் ஆண்டவனிடத்தில்....!

எந்தன் முணு முணுப்பினை கேட்டே
சலிப்படைந்து விட்டான் இறைவனும்...!


இப்போதெல்லாம் முகத்தினை திருப்பியவாறு
இறைவனும் முணு முணுக்கின்றான்
என்னைக் கண்டாலே....




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "முணு முணுப்பு" என்ற தலைப்பில் இன்று (31.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

No comments:

Post a Comment