Search This Blog

Wednesday 9 April 2014

அளவற்ற....


அளவற்ற அதிகாரம் மேலோங்கிய தேசத்தில்
அவதரித்த எம்மினம்

அளவற்ற வன்முறை தாங்காது
அளவற்று அழுது வடிகின்றது
அளவற்ற எல்லையற்ற காலம் கடந்தும்...

அளவற்ற இனப்பாகுபாடு...!
அளவற்ற மொழிப்பாகுபாடு...!
அளவற்ற நில அபகரிப்பு..!
அளவற்ற உயிர்ப்பறிப்பு...!
அளவற்ற கடத்தல்கள்..!
அளவற்ற புதைகுழிகள்..!
அளவற்ற இடப்பெயர்வுகள்..!
அளவற்ற எறிகணைகள்
அளவற்ற குண்டு வீச்சுக்கள்..!
அளவற்ற போராட்டங்கள்..!
அளவற்ற இனவழிப்பு..!
அளவற்ற துன்பங்கள்
அளவற்ற வலிகள் தாண்டி
அளவற்ற தூரம் தாண்டி
அளவற்ற ஆழியின் ஆழம் தாண்டி
அளவற்ற தொகையில்
அளவற்ற தேசங்களில்
அளவற்ற கண்ணீரோடு
புலம்பெயர்ந்த எம்மினத்தை....
புலம் பெயர் தேசத்தில் கூட
புதைகுழிக்குள் உயிரோடு
புதைத்து போட தடைகளும்
புலம்பெயர் தேசம் வரை
அளவற்று நீளுகின்றது...!
அளவற்று போன பயமின்மை
அளவற்று போன அதிகாரமும்
அளவற்று போன வலிகளை
அளவற்று அதிகரிக்க வைக்க
அளவற்ற  இனவெறியில்
அலையும் அளவற்ற
அடக்குமுறையாளர்களின்
அளவற்ற அநியாயம்
அளவற்று தொடர்வதும்
அளவற்ற எம் கண்ணீரும்
அளவற்று தொடர்கின்றது
அளவற்ற கால வரையரயின்றியே...

லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அளவற்ற" என்ற தலைப்பில் இன்று (09.04.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

No comments:

Post a Comment