Search This Blog

Thursday 6 March 2014

தீசன் வேலாவின் "தொலைந்தது " பாடல்..!!!


இந்த பாடல் ஒரு காதல் வலியினை எடுத்து சொல்லும் பாடலாகும். அதாவது உயிருக்குயிராய் காதலித்த காதலி இன்னொருவனோடு சுற்றித்திரியும் வலி கொண்ட துன்பத்தை எடுத்துக்காட்டும் இந்த பாடல்  சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை கொடுக்கும் பாடலாக அமைகின்றது. அதனால் வழமையான காதல் தோல்வி பாடல்களிலிருந்து சற்று மாறுபட்டதாக சோகம் நிறைந்ததாய் இல்லாமல் காதல் உணர்வு மற்றும் பிரிவு அத்துடன் ஒரு சமூகத்திற்கான செய்தி என்று சற்று வித்தியாசமான படைப்பாக இன்று வெளி வந்திருக்கும் இந்த பாடலுக்கான இசையானது மூன்று வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்ட நிலையில் பாடலினை முழுமையான நிலைக்கு கொண்டு வருவதற்கு இப்போது தான் காலம் கனிந்து வெளியிடப்பட்டுள்ளது.. 

ஏனோ தானோ என்று பாடலை பாடி வெளியிட நினைத்திருந்தால் எப்போதோ வெளியிட்டிருக்க முடியும். பாடலினை உயர் தர ஒலிப்பதிவுடன் கூடிய காணொளியுடன் ஒரு தரமான படைப்பாக கொடுப்பதற்காக காத்திருந்து அதற்கான வசதிகள் தற்போதே கிடைக்கப்பெற்று இன்று வெளியாகின்றது. 

இசையில் சாதிக்க துடிக்கும் இளம் இசையமைப்பாளன் தீசன் வேலா தன் தனி முயற்சியில் எந்த ஒரு பின்புலமும் இன்றி பல இடையூறுகளின் மத்தியிலும் எதிர்ப்புக்களின் மத்தியிலும் இந்த படைப்பினை ஒரு கனவாக சுமந்து வந்து நனவாக்கியுள்ளார். அதற்கு பக்கபலமாக பல இளம் படைப்பாளிகளும் கை கோர்த்து எல்லோரது முயற்சியும் சேர்ந்து ஒரு சிறந்த  படைப்பாக இது வெளிவந்திருக்கின்றது.    

தீசன் வேலாவின் சிறப்பான இசையில் அவரே பாடலினைப் பாடியுள்ளார். பாடலினை கேட்கும் போது அதனோடு ஒன்றிப்பயணிக்க வைத்த இசையமைப்பாளர் பாடலின் ஆரம்பித்ததிலிருந்து இறுதி வரை டெம்போ குறையாமல் பார்த்து அருமையான படைப்பை கொடுத்த அவர் தகுந்த இடத்தில் உரையிசையினையும்(Rap) கொடுத்து மேலும் பாடலினை மேருகேற்றியுள்ளார்.

நடிப்பில் அசத்தி இருக்கும் நிதனுக்கு சிறப்பான வாழ்த்துக்கள். அருமையாக  ஒளிப்பதிவு செய்திருக்கும் வேணுதரன் மற்றும் சஜித் இப்பாடலை இயக்கியுள்ளனர். டிலானி அஜய் மற்றும் குழந்தை நட்சத்திரம் சது நடித்திருக்க  Droom Vangers நடனக்குழுவினர் நடனத்தில் அசத்தியிருக்கின்றனர்.

சான் டிஜிற்றல் மற்றும் Dds Universal இன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்த பாடலில் உரையிசை பாடகர் தனுசியன் தன் வரிகளில் பாடியுள்ளார். பாடல் வரிகள் கவி அஜய் மற்றும் அஞ்சலி தீசன். சினிமா வரைகலை கிறேட்சன் ,எடிட்டிங் வேணுதரன் மற்றும் மேகவர்ணன் என்று ஒரு இளம் படைப்பாளிகள் பட்டாளமே இதில் கலக்கி உள்ளது...!

இந்திய படைப்பிற்கு நிகராக வெளிவந்திருக்கும் இந்த பாடலின் அழகிய காட்சிகள் கிழக்கின் மட்டக்களப்பில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இனிய நல்  வாழ்த்துக்கள் படைப்பாளிகளுக்கு.....!



அரசி நிலவன் 

No comments:

Post a Comment