Search This Blog

Monday 24 March 2014

ஆலோசனை...!!!


ஓடி வந்தேன் யுத்தம் ஆடிய கோரத் தாண்டவத்தினால்
வாடிச்சோர்ந்தேன் தந்தையினை தேடிக்களைத்ததினால்
நாடி வந்த நாடும் என்னை அணைக்க மறுத்தது...!

திரும்பி ஓடி விடலாமோ வந்த இடத்திற்கே...
விரும்பி நான் கேட்கவில்லை...!
ஒரு ஆலோசனை ஒற்றை வசனத்தில்
ஆண்டவனிடம் கேட்டேன்...!

குழம்பிய உள்ளம்
தளம்பிய வாழ்வு தற்காலிகமாய்
கொண்டவள் என்னிடம்..
கொட்டிக்கிடந்த நம்பிக்கையும்
கொஞ்ச அச்சமும் எங்கோ
தொலைந்து போன நிலையில்...

ஆண்டவனிடம் கேட்டேன்
ஆலோசனை...!


பதில் கொடுத்தான் அவனும்...!
பரிதவித்து நின்ற பாலகி விபூசிகாவும்
அவளை பெற்றவளும்
அடைந்த நிலையும்
அரங்கேறும் கடத்தல்களும்
எனக்கான ஆலோசனைகள்  போலும்..





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஆலோசனை" என்ற தலைப்பில் இன்று (24.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/





No comments:

Post a Comment