Search This Blog

Wednesday 19 March 2014

இன்சொல்...!!!

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்குவது..."


உனக்கு வேண்டப்படுவது போன்றே
எனக்கும் வேண்டப்படும் என்பதை
அறியாமல் அடிக்கடி அள்ளி வீசுகின்றாய்
அனல் பறக்கும் சொற்களை என் மேலே...

அனல் பட்டு பொசுங்கி போன என் மென்னிதயம்
புனல் என்னும் விழிநீரில் நனைந்து
வெம்மை தணிக்கின்றது...!

கருகிப்போன உள்ளத்தில் இருந்து
கனிவாய் உனக்காக பிரசவிக்கும்
இன் சொற்கள் சுகப்பிரசவம் ஆகின்றன
உன் செவி வழியே உந்தன் உள்ளத்தில்...!

இனிமை என்றுமே
கனிவை இழந்ததில்லையே...!

இரும்பான உன் உள்ளத்தில்
இரசாயன மாற்றத்திற்கு உட்பட்டு
இழந்து விட்டதோ தன் தன்மையினை...!

தாக்கத்தின் விளைவாக
வடு சொல்லை வாரி இறைக்கும்
வன்மம் கொண்ட உள்ளம் கொண்டோனே..!
வலிகள் என்றால் என்னவென்று நீ அறியவேண்டும்
இன்றில் இருந்து நானும் இன்சொலுக்கு தடை விதிக்கின்றேன்...
இன்சொல் உண்டு வன்சொல்லை கக்கும் நீ திருந்துவதற்காக....






லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "இன்சொல் " என்ற தலைப்பில் இன்று (19.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/




1 comment:

  1. // இனிமை என்றுமே
    கனிவை இழந்ததில்லையே...! //

    அருமை... உண்மை...

    ReplyDelete