Search This Blog

Tuesday 26 November 2013

கார்த்திகை தீபங்களே...!!!

தலைவன் சொல்லை செயலில் நிறுத்தி,
தரணி போற்ற, மாவீரரான கண்மணிகளே...!

சொப்பனத்திலும் தமிழீழம் காணும்,

சொல்லின் வேந்தர்களே...!

களமாடி கனிந்து சென்றிட்ட

கல்லறை தெய்வங்களே...!

சாவின் பின்னும் வாழ்வினை தொடருகின்ற 

சாகா வரம் பெற்ற சரித்திர நாயகர்களே...!



இருண்ட எம் தேசத்தின் மேல், 
விளக்கேற்றி சென்ற கார்த்திகை தீபங்களே - எங்கள்
இதயங்களில் கிளை பரப்பி நிற்கும் பெரு விருட்சங்களே..! 
மண்ணில் விழுந்த வித்துக்களே..!
வரலாறு செப்பிடும் இலட்சிய புருஷர்களே....!


கனவுகள் மெய்ப்பட..காற்றோடு கலந்து விட்ட 
காவிய நாயகர்களே...!
கார்த்திகை நாளில் ஒரு சத்தியம் பூணுகின்றோம்... 
உங்கள் சுவடுகளை தொடர்ந்தபடி,
உங்கள் இலட்சிய நெருப்பாய் நாமும் கொழுந்து விட்டு எரிவோம்....!!!

2 comments: