Search This Blog

Wednesday 27 November 2013

மலரும் தமிழீழமதில்,, மலர்ந்திடுவீர் கார்த்திகை பூக்களாய்.....!!!




கருவறையில் - தமிழீழ
கனவோடு
கருத்தரித்து,,
களமாடி,,
கல்லறையில் துயில் கொள்ளும்
கண்மணிகளே....!!!



புயலாய் புறப்பட்ட - வெஞ்சின

புலி மறவர்களே...!!!

மன்னவன் "கரிகாலன்" பாதையில்,

மனவுறுதியுடன் ஏகி,,
மண்ணுக்காய் வித்தாகி
மண்ணோடு சங்கமமாகி,,
மனக்கனவோடு உறங்கும்..
மரகதங்களே...!!!

சிந்திய குருதி காய்ந்தாலும்,,

சீறிய சன்னங்களின் ஒலி மறைந்தாலும்,,
உம் கல்லறைகள் விறாண்டப்பட்டாலும்,,
கல்லான எம் கடவுள் உயிராவான் -எம்
கனவு நனவாகும்...!!!



கல்லறை பூக்களே - நீவிர்

துயில் நீங்கி எழும் காலம்
வெகு தூரமதில் இல்லை...!!
தங்கப்பதுமைகளே கண்திறந்து பாரீர்...!!
தமிழீழ வேட்கையோடு - உங்கள்
தமிழீழ மக்கள் நாம் என்றும் களத்தில்..
மலரும் தமிழீழமதில்
மலர்ந்திடுவீர் கார்த்திகை பூக்களாய்.....!!!

 - அரசி நிலவன் -


No comments:

Post a Comment