Search This Blog

Tuesday 12 November 2013

பணத்தின் குணம்...!!!


பணமது கனமாக பைகளில்
பரவிக்கிடந்த காலங்களில்....
பணமதின் குணம் அறியவில்லை...

கடதாசியோடு ஒரு கடதாசியாக....
பண்டத்தொடு ஒரு பண்டமாக..
உணர்ந்து கொண்டேன்....

பலர் என் பின்னால்...
பக்குவமாய் பேசி காரியம் சாதித்தோர்..
பறந்து சுற்றி நின்ற சுற்றங்கள்...
கரிசனையும் அன்பும்
கணக்கில்லாமல் கொட்டிக்கிடந்தது....

பைகள் வெறுமையாகிப்போன
நிகழ் காலமதில்......
பணத்தின் குணம் அறியப்பட்டது..
பண்டமல்ல...
பரிணாம வளர்ச்சியில்
பணமும் ஒன்றாகிப்போனது...!
மனிதனையே மதிப்பிடும்
மகத்தான உயிர்ப்பொருளாய் ஆனது
மரத்துப்போன மூளைக்கு புலப்படுகின்றது
இப்போது....

வேண்டாத போது கொட்டிய கரிசனைகள்
வேண்டும் நிலையில் கொடுக்கப்படும்
நிலையில் இல்லாமல் போவதற்கு
நிலையற்ற பணம் சிபாரிசு செய்கின்றதா...??

பரிதாபப்படும் நிலையில்
உள்ளது பணமா...??
மனிதமா...??

மனிதர்கள் குணம் மாறிப்போனதற்கு...
                         பணம் காரணமா...??
                         பணம்
                         குணம்  பெற்று போனதற்கு
மனிதர்கள் காரணமா....??


குணங்கள் மரணித்துப்போன
கணங்களின் மத்தியில்....
பணமின்றி வாழ்வதை விட
பிணங்களோடு
மணத்தோடு  வாழ்வதே மேல்....!!!



அரசி நிலவன்


No comments:

Post a Comment