Search This Blog

Sunday 17 November 2013

தொலைந்த முகவரி தொடர்பில்.....



அன்றைய நட்பின் சுவடுகளை தேடி 
அறிந்த உள்ளம் வானமேறி வந்து 
கண்ணில் வைத்துப்போனது....!!!

நெதர்லாந்து தேசத்தில் இருந்து 
நெருங்கி வந்த நட்பால் 
நெகிழ்ந்து போன நெஞ்சம்...!!!

தொலைக்கப்பட்ட உயிரின் 
தொன்மையான நட்பாய்...
தொடர்கின்ற நிகழ்கால பந்தம்...!!!

நட்பில் பிறந்த பந்தமது 
நன் மதிப்பாலே சொந்தமாகி...
முக நூலினால் மீண்டும் 
முகவரி அறிந்து கொண்டதாம்...!

பண்டைய கதைகள் பேசி
பரிமாறப்பட்ட செய்திகளாய்
பழகிய நினைவுகள் 
உயிர் பெறுகின்றன...!!!

அன்பு வேண்டுகோளினை ஏற்று...
அவசரமான உலகில்
தட்டுப்பாடாய் போன காலத்தினை ஒதுக்கி
தனிவழியே காத்திருந்து சந்தித்து திரும்பிய 
உள்ளம் கொண்டோரினை 
காண்பது அரிதன்றோ...?

பிரியாவிடை பெற்றுச்சென்ற பெற்றவரின் 
பிரியமான நட்பாய்...
பிரிந்து போகாமல் இணைந்து கொண்ட 
தொலை தூரத்து சொந்தமே...!!!
தொலைந்து போகாமல் என்றும் 
தொடர வேண்டும்....!!!

அகிலம் நீங்கிப்போன 
அன்பு ஆத்மா நிம்மதியடையும்...!!!
அருகில்லாத நேரம் 
அரவணைப்பாய் , அன்பாய் ,
ஆலோசனையாய் , ஆதரவாய் 
அடைந்திட்ட சொந்தம் இறுதி வரை 
அன்போடு பயணிக்கட்டும்.....!!!


அரசி நிலவன்
   

1 comment:

  1. அன்போடு பயணிக்கட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete