Search This Blog

Sunday 25 October 2009

யார் புரிய வைப்பார்கள்???







நட்ட நடு சாமத்திலே
பசியின் கொடுமை வயிற்றை தாக்க
துப்பாக்கியோடும்.. இராணுவ பூட்சுகளோடும்
போராடி ஓய்ந்த மேனி வலியால் துவள,
அரை உயிரோடு துடிக்கின்றான்..
கனவுகளோடு, தன் வாழ்வினையும் தொலைத்த
கன்னித்தமிழன் ஒருவன்..!


மனம் விரும்பியவளை..
மாலையிட்டுக்கொள்ள,
மாமாங்கப்பிள்ளையார் கோவிலுக்கு,
மஞ்சள் தாலியுடன் சென்றவனை,
மடக்கிப்பிடித்து ஒரு துரோகக்கும்பல்..!


கிழக்கிற்கு புதிதாக ஊடுருவிய
“வடக்கின் புலி” என்று முத்திரை குத்தி,
தெற்கின் “பூஸா” விற்கு புரமோஷன்
வாங்கி வந்தவர்களில் இவனும் ஒருவன்..!


ஒவ்வொரு கணமும் செத்துப்பிழைக்க வைக்கும்
சித்திரவதையை விட..
மரணத்தை அதிகமாக,
நேசிக்கும் உயிர்களில் இவனும் ஒருவன்..!


கிழக்கு மாகாணத்திற்கு காதல் செய்ய சென்ற,
இந்த அப்பாவியை கொடுமைப்படுத்துபவர்களுக்கு
யார் புரிய வைப்பார்கள்...???
"கோர்ட் சூட்" அணிந்து
பாதுகாப்பின் உச்சத்தில்
பாராளுமன்றம் சென்று வருவது..
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் புலி என்று ..!




"அரசி "




No comments:

Post a Comment