Search This Blog

Saturday 31 October 2009

உயிரோடு கலந்தவளடி நீ...!!!!!




சுண்டி விட்டால் உதிரம் வரும் வெள்ளையடி..நீ..!!
மிளகாய் கடித்தவள் போலாகின்றாய்..
என் வதனம் கண்டால்...,
கோபம் கொண்டல்ல... நாணம் கொண்டு...!!!
சந்திக்க வரும் தருணமெல்லாம்...
சங்கடப்பட்டே காலத்தை போக்கிடுவாய்...!
சுற்றி முன், பின் கண்களை அலைய விடுவாய்..!
உன் திருட்டு விழிகளால்..., ஊரையே கூட்டிடுவாய்..!
உன்னை பார்த்தால், எனக்கும் வியர்த்து கொட்டும்..!!!

உதட்டின் அசைவாலே,, என் வினாவுக்கு விடையளிப்பாய்..!
உன் கண்களின் மொழி படித்து, பட்டமும் பெற்றுவிட்டேன்..
உன் பல்கலைக்கழகத்தில்...!!!
இன்னும் நான் ஒரு வேலை இல்லா பட்டதாரி தான்...!!
எப்போது நியமனக்கடிதம் கொடுப்பாய்...?
உன் கணவன் என்ற பதவிக்கு...!!!

உண்டி சுருங்கிய அழகிய...,
உயிரோவியமடி...நீ..!!!
உள்ளத்தால் குழந்தையாக...,
உருவத்தால் காதலியாக...,
உணர்வால் மனைவியாக...,
உயிரோடு கலந்தவளடி நீ...!!!

"அரசி " 

1 comment:

  1. Anbin Arasi,

    Please visit to my blog nmuralitharan.blogspot.com
    Thanks, take care.

    Murali

    ReplyDelete