Search This Blog

Saturday 31 October 2009

உயிரின் பிரிவும்….! உறவின் பிரிவும்…!

உடலைப்பிரிந்து சென்ற,
உயிர் ஒன்று மீள..
உடல் சேராது என்ற,
உண்மையை..,
உணர்ந்து கொள்ளும் வரை,
உயிரை உருக்குலைக்கும் பிரிவுத்துயரானது,
உள்ளம்…!
உணர்ந்து கொண்டதும் ஆறி விடும்…

உள்ளத்தை விட்டுப்பிரிந்து சென்ற,
உறவானது..!
உலகத்தில் எங்கோ ஓரிடத்தில்..
உயிரோடு வாழும் போது - அந்த
உயிரான உறவு! எப்போதாவது மீள
உறவாகிடுமா?? என,
உள்ளத்தில்...
உண்டாகும் யுத்த களத்தில்..
உயிரானது மரணித்து மீண்டும்,
உயிர்த்தெழுகின்ற... பிரிவுத்துயரானது,
உயிர் துறக்கும் வரை ஆறாது...!

"அரசி"

No comments:

Post a Comment