Search This Blog

Friday 9 October 2009

முல்லையில்.... கடற் பறவைகளின் கூச்சல்...!!!


கரிகாலன் ஆட்சியிலே - நாம்
கட்டுமரம் ஏறி போகையிலே..
கடலலைகள் தாலாட்டிடுமே...!
கண்குளிர நிலா மகளை ரசித்து, ரசித்து..
கன மீன்களை அள்ளிடுவோமே...!

சுறாக்கள் எம் வலையில் சிக்க முன்,
டோறாக்களின் பார்வையில் சிக்காது,
திரும்பிடுவோம் கரையை நோக்கி...



தம்பிமாரின் விசைப்படகில்..
தலை நிமிர்ந்து பறக்கும்,
தாயகக் கொடியின் அணிவகுப்பு.. கடற்
தாயினை பெருமை கொள்ள வைக்குமே...!

இன்று...

காலனவன் ஆட்சியிலே...!
கட்டுமரம் கரையிலே...!
கட்டப்படாமல் கிடக்க..
கடற் பறவைகளின் கூச்சல் மட்டும்...,
கேட்கின்றது...காதுகளில்..!

கரைக்கு வராத மீன்களை எண்ணி, இந்த கூச்சலோ..??
கரை ஒதுங்கும் தமிழனின் சிதைந்த பாகங்களை..,
கண்டு எழுந்த கூச்சலோ...??

No comments:

Post a Comment