Search This Blog

Sunday 25 October 2009

தொலைந்து போய் விட்டாள் அவள்....!!!



சித்தரித்து வைத்த
சித்திரம் ஒன்று
சிரித்தபடி என் முன்னே நிற்க..
சிலிர்த்து விட்டேன்…நான்..!!

பார்த்து பார்த்து அடியேன் இதயமதில்
செதுக்கி வைத்த சிற்பம் கண் முன்னே
உயிருடன் கண் சிமிட்ட..
உயிரோடு சிலையானேன்.. நான்..!!

சற்றும் தாமதிக்காது அந்த அழகோவியம் – என்னை
அண்மித்து தன் காதலை செப்பியது…!
நானோ,, 
எதோ ஒரு உலகம் சென்று திரும்பினேன்..!
சொப்பனமன்று என்று அறிவு உணர்த்தினாலும்,,,
அதை உணர மறுத்தது இதயம்..!
இதயம் உணர்ந்தபோது அவள்
சென்று விட்டாள் தொலைதூரம்..!
வாயைப்பிளந்து நின்ற என்னை,
சுற்றி நின்ற கூட்டம் மொய்ப்பதற்குள்,
ஓட்டமெடுத்தேன் அவளை நோக்கி...
நம்மூரைப்போல சோதனைச்சாவடிகள் இல்லாத
காரணத்தினாலோ என்னவோ...? அவள்
அடைந்து விட்டாள் தன் இருப்பிடத்தை
வெகு விரைவாக…

மின்னலாய் வந்து சென்றவளின்
நினைப்பால்.... 
ஒரு இரவுப்பொழுது..ஓர் யுகமாகி… 
உறவுகள் அன்னியமாகின…!
துள்ளி எழுந்த போது… புலரவில்லை காலைப்பொழுது..!
கண் விழித்து காத்திருந்து கன்னியவளை,
கண்ட போது….அந்தி சாய்ந்தது மாலைப்பொழுது..!
கரம் பிடித்து காதலை சொன்னேன்..!
கட்டியணைத்து முத்தமிட்டேன்…!

என்னை விட புண்ணியம் செய்தவன்
எவனுமில்லை…
என்றிருந்தேன்.. மமதையுடன்..!
எண்பது நாட்களில்…
என்னை விட "பைத்தியக்காரன்"
எவனுமில்லை,,,
என்றுணர்த்தி விட்டு,
தொலைந்து போய் விட்டாள் அவள்....
இன்னொரு ஆண் மகனின் வாழ்வை
தொலைக்க……………


"அரசி "

No comments:

Post a Comment