Search This Blog

Sunday 25 October 2009

இரட்டிப்பாக்கி விடு...! இரவலனான அவன்,, வாழும் காலத்தினை...!!!




இதய நோய் என்று சொல்லி வந்தவன்...
இலட்சங்கள் பலவற்றை அபகரித்து விட்டு - என்
இதயத்துடிப்பினையும் அதிகமாக்கி விட்டான்...
இறைவன் என்றொருவன் இருந்தால்..,
இரட்டிப்பார்க்க வேண்டும் அவன் ஆயுளினை...!

நாளை நடக்கும் சங்கதி தெரியாமலேயே - அவன்
பொட்டென்று உயிரை விட்டு போய் விடக்கூடாதே...

அடுத்தவனை ஏமாற்றி அதில் உயிர் வாழும்,
அவனுக்கு அவஸ்தை என்றால் என்ன என்று,
அடித்து, உதைத்துக்கூற முடியாது...!

அன்பாக எடுத்து சொல்லி புரிய வைக்க,
அவன் ஒன்றும் ஆறறிவு ஜீவனல்ல...!

சுயமாக சிந்திக்க அவனுக்கு...,
சுய புத்தியும் இல்லையே...!

பட்டுணர வேண்டும்..! அதற்கு அவன்,
பலகாலம் வாழ வேண்டும்..!

தன் செயலை எண்ணி வெட்கப்பட்டு,,
தன்னை தானே வெறுத்து...,
தனக்குத்தானே காறித்துப்பி..,
தற்கொலை செய்யும் வரை...,
தப்பித்து விட அனுமதிக்காதே...இறைவா..!!

இதயத்துடிப்பினை சமனாக வழங்கி...,
இரட்டிப்பாக்கி விடு...!
இரவலனான.. அவன் வாழும் காலத்தினை...!!!

" அரசி "

No comments:

Post a Comment