Search This Blog

Tuesday 14 January 2014

அறிந்தும் அறியாத தேசத்தில்
செறிந்து நின்ற சனத்திரளில்
தெரிந்து நின்ற வண்ண நிலவாய்
ஒளி வீசி அருகில் ஈர்த்துக்கொன்டவனே

அகம் பார்த்து கரம் கோர்த்தவனே...!
முகம் பார்த்து வரம் கொடுத்தவனே...!

சில்லென்ற தென்றலாய் தழுவிய மூச்சுக்காற்றும்
வில்லென்ற விழிகள் விட்ட கூரான அம்பு பார்வையும்
கல்லென்று அசையாமல் நின்ற என்னை நோக்கி சிரித்த
கொல்லென்ற கிண்டல் சிரிப்பும் உன் பரிவாரங்களாக - நீ
அறிமுகமாகி நின்ற அந்தக்கணப்பொழுது
உறங்கிடாது இறுதிக்கணப்பொழுது வரைக்கும்....!

அறிமுகம் அற்ற இந்த தேசத்தில் அடுக்கடுக்காய்
வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் வடுக்களை விடவும்
தெரிந்து கொண்டு நினைத்து அகம் மகிழ்ந்திட அந்த அறிமுக
காட்சிகள் இன்னும் வண்ண மயமாகத்தான் ஒளிர்கின்றன...!

















1 comment:

  1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete