Search This Blog

Thursday 3 October 2013

இல்லாத மின்சாரம் பாய்ந்தது.. இவன் மூலம் எனக்குள்....!!!


தொட்டும் பார்த்ததில்லை...!
தொண்ணுறுக்கு பின் பிறந்த வீட்டுக்கு
தொலைந்து போனவளை...!

சொல்லக்கேள்வி....
இப்பிடித்தான் இருக்குமோ...?
இல்லாத கற்பனைகள் பண்ணி...
இயன்றளவு முயன்றும்
இம்மியளவும் உணர முடியவில்லை....!
இளமைக்காலத்திலும் அறிவியல் உணர்த்தியது...
இயக்கசக்தி மின்சக்தி ஒளிச்சக்தி என்றெல்லாம்....!
ஒருவித புரியாமையுடன் பல புரிதல்களோடு
கடந்து வந்த கல்வி கற்றுக்கொடுக்க முடியாத
கடத்தல் சக்தி எனக்குள்ளும் ஊடுருவி இயக்கியது...!

பொறி தட்டும் பார்வை..!
பொடிப்பொடியாக்கிடும்
பொல்லாத வலுசக்தி...!

இப்பிடித்தான் இருக்குமோ....??
இல்லாத மின்சாரம் பாய்ந்தது..
இவன் மூலம் எனக்குள்....!!!

கண்கள் சந்தித்தால்
கண்கள் நிலம் நோக்கும்....
இத்தனை வலுவோ
இந்த மின்சாரக்கண்ணில்.....?

மூச்சுக்காற்றின் தொடுகையால்
வெந்து போகின்றேன் நான்...
இவ்வளவு வெப்பமா???
இந்த மின்சார மூச்சில்...

உரசிப்போகும் உள்ளக்கள்வனின்
உதடுகளினால்....
உயிரற்று போகின்றேன்....
இந்தளவு வலுவோ???
இந்த மின்சாரக்கண்ணனில்....!

தொட்டால் அதிர்ச்சி..!
விட்டால் முதிர்ச்சி..!
கண்டேன் நான் மின்சாரமதை
கண்களால்....!
உணர்ந்து கொண்டேன் மின்சாரமதை
உணர்வுகளால்....
உயிர் துறக்காமல்....

கற்றுக்கொண்ட மின்சாரமது
கேள்விப்பட்ட மின்சாரமது
தொட்டுப்பார்க்க துடித்த மின்சாரமது
தாய் வீடு திரும்பியவள் மீண்டு விட்டாள்
எண்ண முடியா உயர் வலுவோடு - இருந்தாலும்
என் மின்சாரக்கண்ணனின் வலு...
மிதமான  மிடுக்கோடு மிதமான வலுவோடு தான்
எனக்கு மட்டும்...!!!

அரசி நிலவன் - தாய்லாந்து




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மின்சாரம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/



5 comments:

  1. ஐயோ... ஷாக் அடிக்கிறது........!

    ReplyDelete
  2. இன்னும் மாற்றங்கள் செய்யவில்லையா...?

    ReplyDelete
  3. தொடர்பு கொண்டேன் நீங்கள் பதில் அளிக்கவில்லை சகோ....

    ReplyDelete
  4. நல்ல சாக்கடித்திருக்கு மின்சாரம்.
    எல்ல வேளை நான் மாட்டவில்லை.

    ReplyDelete