Search This Blog

Monday 14 October 2013

வலிகளை விலை கொடுக்கின்றேன்..!!! வண்ண நிலவன் உன் வரவிற்காக..


தூரமாகிய உந்தன் வரவால்
பாரமாகிய எந்தன்  உள்ளம்...!

வரவுகள் அதிகமான விழிநீரின்
பரவலால் தொலைவில் உறக்கம்..!

இருள் நீங்கினும் துன்பத்தின்
மருள் நீங்கிடாது அதன் பிடியில்...

தொடர்கின்ற முடிவில்லா பிரிவு
படர்கின்ற வலிமை வலிகள்...!

உடைத்தெறிய சத்தியுண்டு- துன்பமதை
துடைத்தெறியும் புத்தியுமுண்டு..!

விடை தெரியா வினாக்கள்
தடை இன்றி நித்தம் வரவாகி
விடை பெற்று செல்கின்றன...
மடை திறந்த வெள்ளமாய்
கண்ணீரை வரவழைத்து..


சஞ்சலங்களை  சகித்து - நெஞ்சம்
சருகாய் போனவள்
சலனமற்ற சரீரம் தனை நீங்கி
சஞ்சரிக்கின்றாள் உன் நினைவுகளோடு
சலிப்பற்று  உன் வரவிற்காய்

வலிகளை விலை கொடுக்கின்றேன்
வண்ண நிலவன் உன் வரவிற்காக..

இதயவனின் இன்ப வரவை வேண்டி
இன்பங்களை காணிக்கை ஆக்குகின்றேன்
இந்த வாழ்வெனும் யாகத்தீயில்....

வலிகளும் வளம்பெறும் ஒருநாள்
வல்லவன் நின் வரவால்....
வலியோடு சிரிக்கின்றேன் - உன்
வரவின் நம்பிக்கையால்....



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "வரவு " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/





3 comments:

  1. அருமை... நம்பிக்கை தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஏக்கங்கள் ஒன்றாகி
    ஏகாந்தம் எரிக்கிறதே
    மாற்றங்கள் தேடிவரும்
    மன்னவனும் கூடிவர
    ஆற்றுகை கொள்வாய்
    அவனியிலே வாழ்வாய் ...!
    ஏற்றங்கள் கண்டே
    எந்நாளும் மகிழ்வாய் ...!

    அழகிய கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. மனதை நெருடும் வரிகள் அரசி...

    வலிமையான வார்த்தைகள் கூடவே வலியும் தருகின்றன...

    அருமை! சிறந்த கவிதை!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete