Search This Blog

Monday 28 October 2013

தந்திரம்...!!!


எந்திரமாய்  சுழலும் அகிலத்தில்
தந்திரமாய்  சுழற்றும் மனிதர்கள்
மந்திரமாய் தப்பித்தாலே உண்டு..!!!

சகுனியின் தந்திரம் மகாபாரதம்..!
கூனியின் தந்திரம் இராமாயணம்,,!

வரலாறும் இல்லை தந்திரமின்றி..
வாழ்க்கையும் இல்லை தந்திரமின்றி..

தந்திரங்கள் பல வெற்றி வாகை சூடி
அந்தரமாய் போன வாழ்க்கையில்
எந்திரமாய் எலும்புள்ள மனிதர்கள்..!


போரில் தந்திரமானவர்கள் மூச்சிழந்து
போனார்கள் பேச்சுத்தந்திரத்தால்...!!!

நாடுகளின் கூட்டுத்தந்திரம்..
முடிந்தது முள்ளிவாய்க்காலில்....!!

அரசியலில் தந்திரம்..
பிரிந்தது வட கிழக்கு..!!

அதற்குள்ளும் தந்திரம்..
முட்டித்தள்ளும் முரண்பாடு..!!

ஆட்சியில் தந்திரம்..
அடங்காத குடும்பம்...!!


வல்லரசின் தந்திரம்..
வலிந்து திணிக்கப்படும் யுத்தம்...!!

தொட்டில்கள் ஆட்டப்படுவதற்காகவே கிள்ளப்படும் குழந்தைகள்...!
தொன்று தொட்டு தொடரப்படும் தொன்மையான தந்திரம்...!  

வருங்காலமதை வல்லமையாய் கணித்து
நிகழ்காலத்தில் தந்திரமாய் பயணிக்கும் தந்திரம்
ஒரு காலத்தில் தகர்த்து எறியப்படும் அச்சம் இல்லாமல்
மந்திரப்புன்னகையுடன் எந்திரமாய் சுழலத்தான் செய்கின்றது...!!!


அரசி நிலவன்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "தந்திரம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

1 comment:

  1. /// தொட்டில்கள் ஆட்டப்படுவதற்காகவே கிள்ளப்படும் குழந்தைகள்...! ///

    தந்திரம் அருமை... உண்மை...

    ReplyDelete