Search This Blog

Wednesday 16 October 2013

தகராறு....!!!


நித்தம் ஒரு போராட்டத்தால்
சத்தம் இன்றி அடங்கி மெளன
யுத்தம் புரியும் எண்ணங்கள்
சித்தம்  கலங்கி தகராறு புரிகின்றது
தத்தம் மனச்சாட்சிகளுடன்.....!!!

மஞ்சத்தில் சாய்ந்த மெய்யின்
நெஞ்சத்தில் கனமான
எண்ணக்குழப்பங்கள்
அமிழ முடியாது தத்தளிக்கின்றன....

தொண்டைக்குழிக்குள் வருவதும்
நெஞ்சுக்குழிக்குள் அமிழ்வதுமாய் - பின்
விஞ்சி மேல் எழுவதுமாய்
பாடாய் படுத்தும் உயிர்த் துடிப்பில்
கலவரம் அடையும் மனம்
கண்டபடி திட்டித்தீர்க்கின்றது..!


கலைந்திட்ட கனவுகளால்
எட்டி உதைத்து தகராறு புரிகின்றது
எடை போட்டு தடுத்திட்ட மனச்சாட்சியினை...



அரசி நிலவன்




3 comments:

  1. உணர்வுள்ள வரிகள்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இன்று முதல் (இப்போது உங்கள் தளத்தில்) தமிழ்மணம் வேலை செய்கிறது... தமிழ்மணம் இணைத்து ஓட்டு அளித்து விட்டேன்... நீங்களும் ஒரு ஓட்டும் இடலாம்...

    மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...

    ReplyDelete