Search This Blog

Tuesday 15 October 2013

அடிமை...!!!


அடுப்பின் புகை முகர்ந்து பழகியவர்கள்
துப்பாக்கியின் புகை நெடியினை சுவாசித்து
இனத்தின் அடிமை விலங்கொடிக்க
இடி என முழங்கி அணி திரண்டனர் - தமிழ்
இனத்தின் அடிமை விலங்கோடு - பெண்
இனத்தின் அடிமை விலங்கும் தகர்த்திட்ட
இமயத்தின் பின்னால்....

மூன்று தசாப்த யுத்தமும்
மூச்சின்றி அடங்கியதால்
அடிமையாகிப்போனது
அடங்கா மண்ணின் மூச்சு...!!!

ஆயுதங்கள் தரித்திரிந்தோர்
ஆருமின்ரி அந்தரித்தனர்....
ஆரம்பித்தது அடிமை வாழ்வு
ஆதியிலிருந்து...

பெண்மைகள் வதைக்கப்பட்டன...
ஆண்மைகள் சிதைக்கப்பட்டன...
உயிர் மீண்டவர்கள் இன்றும்
உடைத்திட முடியா அடிமைவிலங்கில்
அகப்பட்டு அல்லாடியபடி...

தலை நிமிர்ந்து  திமிருடன் 
தலை வணங்காது  நடந்த 
தரை எங்கும்  இன்று நாணி
தலை குனிந்து செல்லும் நிலையும் 

சொல்லாட 
சொந்தங்களே  பின்நிற்கின்ற
சோகமும்,,,  

இரண்டடி தூரத்தில் பேசிடும் வசைமொழிகளும்,, 
இரவுக்கு மட்டும் தெரிந்திடும் கண்ணீரும்,,
எந்த நொடியும் வாசலுக்கு வரலாம் என 
எதிர்பார்த்து கலங்கிடும் விசாரணை அழைப்பும்,,

அடிமை வாழ்வு அள்ளிக்கொடுத்த 
அதிகப்படியான சலுகைகள் 

சிறுமையாகிப்போன வாழ்வில்
வறுமைக்கும் அடிமையாகி வாழும் 
வெறுமை யாகிப்போன தேசத்தில் 
மறுமையிலும் பிறக்க வேண்டாம்...!!

1 comment:

  1. தமிழ்மணம் இணைகிறது... ஆனால் ஓட்டுப்பட்டையாக மாறவில்லை... script-யை சரி பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete