Search This Blog

Tuesday 23 March 2010

யார் எக்கேடு கெட்டால் என்ன..???


முந்தி நாம் குடியிருந்த நிலத்தில்
முள் வேலி ஆக்கிரமித்தால் எமெக்கென்ன..?

உயர் பாதுகாப்பு வலயம் இருந்தால் என்ன..?
உயர் விலை ஏற்றம் ஏறிக்கொண்டே தான் போனால் நமக்கென்ன..?? 

அரசடி பிள்ளையார் இடம்பெயர்ந்து
அதில் புத்த பிரான் குந்தி தியானித்தால் நமக்கென்ன..??

விருட்சங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்தால் என்ன...?
வீர பூமி தலை கவிழ்ந்து கண்ணீர் விட்டால் எமெக்கென்ன..??

இடைத்தங்கலில்  இடிபடும் உறவுகள் மீளக்குடியமர்ந்தால் என்ன..?
இதுவரை குடியமர்ந்தவர்கள் எக்கேடு  கெட்டால்  தான் நமக்கென்ன..??

கல்வி.. இறக்கம்  கண்டால் தான் என்ன..?
கலாச்சாரம் தலை  விரித்து ஆடி  சீரழிந்தால் நமக்கென்ன..??

ஊழல் உல்லாசமாய் உலவினால் என்ன..?
ஊருக்குள்ளே  வேற்று மக்களின் வியாபாரத்தலையீடு
ஊஞ்சல் ஆடினால் தான் எமெக்கென்ன..??
ஊளையிடும் நரிக்கூட்டம் எம்மினத்தை முழுங்கித்தின்றால் தான் என்ன..??

நாளொரு சுவரொட்டி கொண்டு நகரை
நாறடிக்கும் அரசியல் வாதிகள  எமக்கு...
யார் எக்கேடு  கெட்டால் என்ன..??
யாழ்ப்பாணத்தில் இப்போது  நாம்  தான்   ராஜா..
யார் எம்மை கேட்க முடியும்.....???..??
யாரால் எம்மை அடக்க முடியும் ....???..??


அரசி

1 comment:

  1. எது நடந்தாலும், நமக்கென்னவென்று நாமிருந்தால், கடைசியில் நாம் யாவருமே காணாமல் போய்விடுவோம்.

    ReplyDelete