Search This Blog

Tuesday 9 March 2010

காதலனுக்கு கல்யாணமாம்...!!!


வருகின்ற பங்குனி(தமிழுக்கு)...
வரப்போகின்றானாம் வெளிநாட்டிலிருந்து....
அஞ்ஞான வாசம் முடித்து வரும்
அணங்கு அவனுக்கு...
அம்மா அப்பா விரும்பிய பெண்ணோடு..
திருமணமாம்...!!!

தேடிப்போய் 
தொந்தரவு இளைத்து,,
விரும்புகின்றேன் என்று
விரும்ப வைத்து,,
காதல் மொழி பேசி,,
காலங்கள் மூண்றாண்டுகள்
கரைந்த போது,,
காதலி கண்ணுக்கு எட்டியவளாய்
காட்சி கொடுக்க.....,
பொய்யுரைத்து சென்றான்...
விரும்பவில்லை என்று.....!!

காத்திருந்த பெண்மை.........
காரிருளில் தவித்தாள்...
காலங்கள் விரைவாகியும்..
காதல் அழியவில்லை...!!!

காதலனுக்கு கல்யாணமாம்...!!
காற்றில் மிதந்து வந்த செய்தி
காதிலே மோதியும்.....
சலனமற்றவளாய் ஒரு
புன்னகையை உதிர்த்தாள்...!!!


- அரசி -

No comments:

Post a Comment