Search This Blog

Showing posts with label மாவீரர்கள். Show all posts
Showing posts with label மாவீரர்கள். Show all posts

Thursday 21 November 2013

அக்கினி குஞ்சுகள்.!!!



புனலிலும் அனலாய் கனன்றிடும்

புனித மேனியர்...!!!
புயலாய் காற்றிலும் சுழன்றிடும்
புதுக்காவிய நாயகர்கள்...!!! 

தேகம் மீதிலே வெடிகளைச்சுமந்து - தமிழீழ

தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்....!!!



வெஞ்சின கரு வேங்கைகளே...!!!

வெற்றியோடு திரும்பும் உங்கள் நாமம் மட்டுமே...

வீழ்ச்சி கண்ட எம் தமிழின மானத்தை

எழுச்சி கொள்ள வைத்திட…
வீரத்தலைவனின் வழிகாட்டலில் - நெருப்பாய்
எழுந்திட்ட எம் உயிர் அம்புகள்...!!!



காலம் வைத்து விட்டு சென்ற பணியினைத்தொடர

காலனுக்கே சவால் விட்டு – தம் மரணத்திற்கு தாமே
கால நேர இடம் குறித்து,,,
காவியம் படைக்கும் சரித்திர நாயகர்கள்...!!!

அழுத்த மனதுடனும்,,

அமுக்க உடலோடும்,,
அன்பாய் கதை பேசி
அரவணைத்து - எம்மை
அழ வைத்து அலை அலையாய்
அணி திரண்டு செல்லும் கரு முத்துக்கள்...!!!


புன்னகைத்து கையசைத்து சாவினைத்தேடிப்போகும்
புதிய இலக்கண வீர மறவர்கள்…!!!

நெருப்பின் வயிற்றிலே கருத்தரித்து,,

நெருப்பாகி ,காற்றோடு கலந்திடும் அக்கினி குஞ்சுகள்..!!!

காவிய நாயகர்களே....!!!

காற்றிலே உயிராய் கலந்திருக்கும் உங்கள் மூச்சுக்கள் மீதும்
காலம் மீதும் சத்தியம் - நாம் ””வெற்றி ””
காண்போம் உறுதி....!!!

வீரவணக்கங்களுடன்

 “அரசி நிலவன்”





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அக்கினி " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Wednesday 20 November 2013

சிகரம்...!!!


அனல் பொறிகளால் செய்த தேகம் கொண்டு
கனல் பறக்கும் விழிகள் தாங்கி, செந்தணலாய்
சமர் புரிந்து சிந்திய ஒவ்வொரு துளி குருதியும்
பல்லாயிரம் சுதந்திர தாக வேட்கையுடன் மண்ணோடு
திரண்டு தாயக உறுதி பூண்டு இன்னும் காத்திருக்கின்றது....!!!

சிலிர்த்து பூத்துக்குலுங்கும் செங்காந்தள்
சிணுங்கலுடன் உங்கள் வழி நோக்கி
காத்திருக்கின்றது கண்ணீருடன்...
காவிய நாயகர்களின் மூச்சு காற்றைச்சுவாசித்து
காலத்தின் வரலாற்றில் தாமும் இடம் பிடிப்பதற்காய்.....


கண் திறந்து பாரீர்
கனன்று விம்மும் இதயங்கள்
அமைதியாய் உங்கள் நாமத்தினை உச்சரித்து
அழைக்கும் ஒலி கேட்கலையோ....??
ஆரவாரமின்றி நெஞ்சறையில் பூட்டி
ஆர்ப்பரிக்கும் துன்பலைகளை அடக்கி
இதயங்களில் உயர்ந்த  சிகரங்களாய் கட்டி வைத்து
இரத்த நாளங்கள் புடைக்க அர்ச்சிக்கும் மெளனத்தின்
ஒலி உணரலையோ....???

செங்குருதியால் சிவந்த மேனிகள் உங்களின்
செஞ்சோற்றுக்கடன் தீர்ப்போமா...???


தீயும் நெருங்கிட தயங்கும்
தீராத சுதந்திர தாகம் கொண்ட
தீரர்கள் உங்களின்
தீச்சுவாலை விழிகளை
காணத்தவமாய் தவம் புரிகின்றோம்...!!!
கார்த்திகையில் கோலம் இட்டு
காந்தளை கைகளில் ஏந்திக்
காத்திருக்கின்றோம்.....!!!


தமிழ் தேசமதின் சிகரங்களாக
தமிழ் நெஞ்சங்களில் வாழும்
தங்கப்பேழைகள் நீங்கள்
தரணியில் உயர்ந்து நின்ற
நினைவாலயங்கள் தகர்க்கப்பட்டாலும்
நிலைத்து நிற்பீர்கள் என்றென்றும்
சிகரங்களாக எம் இதயங்களில்....

சிலிர்த்து வரலாறு சொல்லுவோம்...
சிகரத்தின் உச்சியில் வைத்து பூசிப்போம்..!!



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சிகரம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Friday 8 November 2013

கார்த்திகையின் கண்ணீர்...!!!


கார்காலத்தில் கல்லறை தேடி வரும்
கண்மணிகளே உங்களை காணாது....

காத்திருந்து மலர் சொரிகின்ற
கார்திகைப்பூக்கள் உதிர்கின்றன....
பறிக்கப்படாமலேயே...


கானக்குயில்கள் திசையற்று
கானம் இசைத்து தேடுகின்றன....!

கார்காலத்து கார்மேகமும் - உங்களை
காணாது பதறுகின்றன விண்ணில்...!

கார்த்திகை மாதமும் கலங்கி
கண்ணீர் வடிக்கின்றது....!


உறைவிடங்கள் உலுப்பப்பட்டு
உடைக்கப்பட்ட தங்க விக்கிரகங்களை
மென்று தின்று ஏப்பம் விட்டவர்களின்
மத்தியில் நின்று...
உங்கள் உதிரங்கள் தோய்ந்த
மண்ணின் வாசம் நுகர்கின்றோம்....!!!

ஆண்டவனின் ஆலயமணியும்
ஆராயப்படுகின்றது கார்த்திகையில்....!!!

சுடர்தீபங்களுக்கும்  விளக்க மறியல் கார்த்திகையில்...!!
சுற்று வட்டாரம் எங்கும் சீருடைகளின் ஆதிக்கம்..!!
சுடர் ஒளிகள் உங்களை காண அந்தரமாய்
சுற்றி சுற்றி ஏங்கித்தவித்து
சுழலும் எங்களை காண வாரிரோ..??



அரசி நிலவன்