Search This Blog

Showing posts with label கரும்புலிகள். Show all posts
Showing posts with label கரும்புலிகள். Show all posts

Thursday 21 November 2013

அக்கினி குஞ்சுகள்.!!!



புனலிலும் அனலாய் கனன்றிடும்

புனித மேனியர்...!!!
புயலாய் காற்றிலும் சுழன்றிடும்
புதுக்காவிய நாயகர்கள்...!!! 

தேகம் மீதிலே வெடிகளைச்சுமந்து - தமிழீழ

தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்....!!!



வெஞ்சின கரு வேங்கைகளே...!!!

வெற்றியோடு திரும்பும் உங்கள் நாமம் மட்டுமே...

வீழ்ச்சி கண்ட எம் தமிழின மானத்தை

எழுச்சி கொள்ள வைத்திட…
வீரத்தலைவனின் வழிகாட்டலில் - நெருப்பாய்
எழுந்திட்ட எம் உயிர் அம்புகள்...!!!



காலம் வைத்து விட்டு சென்ற பணியினைத்தொடர

காலனுக்கே சவால் விட்டு – தம் மரணத்திற்கு தாமே
கால நேர இடம் குறித்து,,,
காவியம் படைக்கும் சரித்திர நாயகர்கள்...!!!

அழுத்த மனதுடனும்,,

அமுக்க உடலோடும்,,
அன்பாய் கதை பேசி
அரவணைத்து - எம்மை
அழ வைத்து அலை அலையாய்
அணி திரண்டு செல்லும் கரு முத்துக்கள்...!!!


புன்னகைத்து கையசைத்து சாவினைத்தேடிப்போகும்
புதிய இலக்கண வீர மறவர்கள்…!!!

நெருப்பின் வயிற்றிலே கருத்தரித்து,,

நெருப்பாகி ,காற்றோடு கலந்திடும் அக்கினி குஞ்சுகள்..!!!

காவிய நாயகர்களே....!!!

காற்றிலே உயிராய் கலந்திருக்கும் உங்கள் மூச்சுக்கள் மீதும்
காலம் மீதும் சத்தியம் - நாம் ””வெற்றி ””
காண்போம் உறுதி....!!!

வீரவணக்கங்களுடன்

 “அரசி நிலவன்”





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அக்கினி " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/