Search This Blog

Wednesday 14 April 2010

புது வருடத்தை மனதார வரவேற்கும் புதுப்பருவம்...!!!


புத்தாடை அணிய வேண்டி ஆசையுடன்
புது வருடத்தை எதிர்பார்த்த பள்ளிப்பருவம்...!!!

கைவிசேஷம் பெற்றுக்கொள்ள அங்கலாய்த்த
கல்லூரிப்பருவம்...!!!

பட்டாசுகளை கொளுத்தி, பழசுகளின் முணு முணுப்பால்
பரவசமாய் மகிழ்ந்திருந்த விடலைப்பருவம்..!!

வருடப்பிறப்பு சிறப்பு நிகழ்ச்சிகளை எதிர்பார்த்து
வருடப்பிறப்பை வரவேற்ற இருபதுகளின் தொடக்கம்..!!

யாழில் கைத்தொலைபெசிகள் அறிமுகமாகி...
யாவருக்கும் குறுஞ்செய்தி சேவை மூலம்
வாழ்த்து அனுப்பிட துடித்த கன்னிப்பருவம்...!!!

உலகத்தை மறந்து,,
உயிர் ஒன்றின் வாழ்த்துக்காக
துடித்த காதல் கொண்ட பருவம்..!!

வருடம் பிறப்பதும் முடிந்ததும் தெரியாமல்
சூனியமாய் கடந்து சென்ற வலி கொண்ட பருவம்..!!

என்ன நடக்குமோ?? ஏது நடக்குமோ...??
என்று இழந்து விட்ட பாதி உயிர்களின் சோகத்தால்
எதிர்பார்க்காமல் பிறந்த கடந்த விரோதி வருடத்தை
எதிரியாய் நோக்கிய அழுகைப்பருவம்..!!!

புத்தாடை, கைவிசேஷம்,பட்டாசு,சிறப்பு நிகழ்ச்சிகள்
குறுஞ்செய்தி செவைகள்,வாழ்த்துக்கள், வலிகள்,துன்பங்கள்,அழுகைகள்
கொண்ட வருடப்பிறப்பு பருவங்களை கடந்து...
புது மாற்றத்திற்காய்...
புது எதிர்பார்ப்போடு..
புது வருடத்திலாவது  நல்லது நடக்குமா??
புது எதிர்பார்ப்போடு...
புதுவருட பிறப்பின் கிரக மாற்றத்திற்காய்..
புது வருடத்தை மனதார வரவேற்கும் புதுப்பருவம்...!!!



என்னினிய உறவுகளுக்கு இனிய சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!!!
அன்புடன்
அரசி

No comments:

Post a Comment