Search This Blog

Friday 13 September 2013

எம் ஈழத்து உறவுகளின் கண்ணீரால் சகதியாகின்றது துபாய் மண்..!!!



சொந்த நாட்டிலே வாழ வழியற்று, உயிர் அச்சுறுத்தல் மரண பீதியில் உயிரைக்கையில் ஏந்தி எத்தனையோ துன்பங்களை தாண்டி சிறைகளில் சித்திரவதை அனுபவித்து மீண்டும் உயிர் பிழைப்போமா என்ற கொடிய நிலை தாண்டி, அவதியுற்று நாடு விட்டு இந்தியா சென்றவர்கள். அங்கும் அகதி என்ற அவல வாழ்வினை வாழ்ந்து இடர்களை தாங்கி எதிர்கால வாழ்வுக்காய் அங்கலாய்த்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களில்  ஒருவர்களாய் இருந்து, எந்த நேரமும் மறுபடி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு விடுவோம் என்ற பீதியால் ஆபத்து நிறைந்த கடற்பயணத்தை குழந்தைகளோடும் முதியவர்களோடும் ஆஸ்திரேலியா நோக்கித்தொடர்ந்த இவர்கள் தமது கனவுகளின் கரையினைத்தொட்டுக்கொள்ளாமல் இன்றும் நடுக்கடலில் தத்தளித்து முக்குளிக்கின்றார்கள்.



தம் எதிர்காலம் உலகில் உள்ள இலங்கையைத்தவிர வேறு எந்த ஒரு நாட்டிலும்  நிம்மதியாகத்  தொடரப்படும் என்ற அதீத நம்பிக்கையிலும் ,உயிர் வாழும் ஆசையிலும் கடலில் பயணிக்க தொடங்கிய அவர்கள் பயணம் செய்த படகானது நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி, கடலில் தத்தளித்து ஒரு வழியாக துபாய் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் கப்பல் ஒன்றினால் காப்பற்றப்பட்டு துபாய் துறைமுகத்தில் கரை சேர்க்கப்பட்டார்கள். அங்கு ஐ நாவுக்கான அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தால் பொறுப்பேற்கப்பட்ட அந் நாற்பத்தாறு உறவுகளில் ஏழு பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். மீதியுள்ளவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் அகதிகளாக  ஏற்றுக்கொள்ளப்பட்டு அதில் இருபத்தியேழு அகதிகள் அமெரிக்கா , சுவீடன் மற்றும் பின்லாந்தினால் மீள் குடியேற்றப்பட்ட நிலையில் மீதி  பன்னிரண்டு உறவுகள்  இன்று வரை துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் அமெரிக்கா , சுவீடன், பின்லாந்து , கனடா போன்ற மீள்குடியேற்ற நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் கடந்த பத்து மாத காலமாக அங்கு அவதியுற்று வருகின்றார்கள்.

எத்தனை இடையூறுகள் ,அவதிகள், துன்பங்கள் எல்லாவற்றையும் தாங்கி அனுபவித்துக்கொண்டு ஏதோ ஒரு நாட்டுக்கு தாம் நிம்மதியாக சென்று வாழ முடியும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த அவர்களை கடந்த சித்திரை மாதத்தில் கூட இலங்கைக்கு திருப்பி அனுப்ப துபாய் அரசாங்கம் முடிவு செய்த போது மனித உரிமைகள் ஆணையம் ,புலம் பெயர் அமைப்புக்கள், மற்றும் தமிழ் அமைப்புக்களின் வேண்டுகோள்கள் போராட்டங்களினால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் அவர்கள் அதே முடிவினை அதாவது இலங்கைக்கு அவர்களைத் திருப்பி அனுப்ப போவதாக ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் கையை விரித்து அவர்களை மீண்டும் கண் கலங்க வைத்து விட்டது.

ஏற்கனவே உயிர் அச்சுறுத்தல் மிகுந்த கொலைக்களமான இலங்கையில் இருந்து தப்பித்து வந்த அவர்கள் கடல் பயணத்தை மேற்கொண்டு இப்படி வேற்று நாட்டில் அகதி தஞ்சம் கோரி ஐ நாவின் அகதிகள் பொறுப்பில் இருந்து எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ள நிராகரித்த பின் அவர்கள்  மீது இலங்கைக்கு இன்னும் அதிகமான ஆத்திரமும் கொலை வெறியும் நிச்சயமாக இருக்கும் என்பது திண்ணம்.
GG
உதாரணமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஏழு உறவுகளில் இலங்கை உளவுத்துறையினரின் மிரட்டல் காரணமாக நால்வர் காணாமல் போயுள்ளார்கள்.  இலங்கை அரசங்கத்தால் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை என்று அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு ஐ.நாவால் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கே அங்கு பிரச்சனைகள் இருக்கும் போது. இலங்கையில் அச்சுறுத்தல் உண்டு என்று ஐ.நா வினால் அகதிகளாக இனங் காணப்பட்ட துபாயில் உள்ள பன்னிருவருக்கும் எப்படியான அச்சுறுத்தல்கள் உயிர் ஆபத்துக்கள்  இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க இயலாது. 

பத்து மாதங்களாக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் மூலமாக அவர்களைப்பற்றி பல விதமான  செய்திகள் வெளிவந்த நிலையிலும் இலங்கைக்கு இதன் காரணமாக பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட பின்னரும் அவர்களின்  உண்மை நிலை உலகிற்கும் இலங்கைக்கும் தெரிந்த பின்னரும் இலங்கை என்ற நாட்டின் திசைப்பக்கம் சென்றாலே அவர்கள்  படுகொலை செய்யப்படுவது உறுதி. அல்லது அங்கு அவர்களைத்திருப்பி அனுப்பினால் நிச்சயமாக அவர்களுக்கு சித்திரவதையுடன் கூடிய உயிர் வதை நரகம் கண்ணில் காட்டப்படும். அங்கு செல்வதற்கு பதிலாக அவர்கள்  துபாயிலேயே தம்மைத்தாமே சாகடித்துக் கொள்ளலாம். இருந்தாலும் இறுதிக்கட்ட முயற்சியாக உயிர் வாழும் ஆசையில் கண்ணீர் மல்க உலகத்தமிழ் உறவுகளின் உதவிகளை வேண்டி நிற்கின்றார்கள்.


அவர்கள்  இலங்கை சென்றால் அங்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும்  தலா இரண்டாயிரம் டொலர்கள் வழங்கப்படும் என்று ஐ.நா அதிகாரிகள் கூறியிருக்கின்றார்கள் . அவர்கள் அந்த  இரண்டாயிரம் டொலர்களுக்காகவா தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடல் தாண்டி தத்தளித்து வந்தார்கள்? அல்லது ஐ.நா  கோடி பணம் தன்னும் அள்ளிக் கொடுத்தாலும் அவர்கள்  இலங்கை மீண்டு அதனை அனுபவிக்கஉயிரோடு தான்  இருப்பார்களா?? இரண்டாயிரம் டொலர்களுக்காக தமது  உயிரை இழக்க முன் வருவார்களா? ஈழத்தமிழர்களின் உயிரை வெறும் இரண்டாயிரம் டொலர்களுக்கு மதிப்பீடு செய்யும் உரிமையினை ஐ.நாவுக்கு யார் கொடுத்தது?? இலங்கை அரசாங்கமா?? எம் உறவுகளின்  உயிர்களுக்கு விலை நிர்ணயித்து அதனை இலங்கைக்கு இந்த ஐ நா அதிகாரிகள் விற்றுக் கொடுக்கின்றார்களா??



அத்துடன் இலங்கை போக மறுத்தால் சட்ட விரோதமாக துபாய்க்குள் நுழைந்ததாக வழக்குப் பதிவு செய்து தனித்தனியாக சிறைக்குள் அடைத்து விடுவதாக மிரட்டுகிறார்கள். நடுக்கடலில் இருந்து  காப்பற்றப் பட்ட வேளை இதே ஐ நா தான் அந்த  நாட்டுக்குள் அவர்களை  அழைத்து வந்து வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல், கடந்த பத்து மாதங்களாக அடைத்து வைத்திருந்தது. அன்றைக்கே அவர்களை கைது செய்து சட்ட விரோத நுழைவாளிகள் என்று  சிறைப்படுத்தியிருக்கலாமே.

அது மட்டுமன்றி சிறையில் கூட மருத்துவ வசதி, சுகாதார வசதி, தொலை பேசி வசதி, உறவினர்கள் வந்து பார்க்கக்கூடிய வசதி, மாற்று உடை வசதி அனைத்தும் இருக்கும் ஆனால் அங்கு  எந்தவிதமான வசதிகள் எதுவும் இல்லாமல் மிருகங்களை விட மிகவும் கேவலமான நிலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மிருகங்களைக் கூட பகலில் மேய்ச்சலுக்கு திறந்து விட்டு இரவில் அடைப்பார்கள். ஆனால் துபாயில் எம் உறவுகள் ஆரம்ப  நாளிலிருந்து இன்று வரை வெளி உலகக்காற்றினை சுவாசிக்க முடியாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மனதளவிலும் உடல் அளவிலும் மிக்க பாதிப்புக்குள்ளாகி கிட்டத்தட்ட இந்த உலகத்தில் தான் உள்ளோமா என்ற ஒரு சந்தேக நிலையில் அவர்களின்  உளநிலை மிகவும் மோசமடைந்து காணப்படுகின்றது. அதாவது வெளி உலகத்தை பார்த்து அரளும் நிலையில் உள்ள அவர்களால் நிச்சயமாக அவர்களின் அனுபவத்தால் பயங்கரமாய் விளங்கும் இலங்கை என்னும் நாட்டினையோ அங்குள்ள அரசினையோ எதிர்கொள்வதென்பது மிகப்பயங்கரமே.

அன்று முள்ளிவாய்க்காலில் குருதி ஆறு ஓட தன் தலை தப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்து சென்ற ஐ. நா, கை கட்டி வாய் பொத்தி இலங்கை அரசுக்கு சாமரை வீசிய வீசிக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள் எல்லாம் வெறும் பன்னிரண்டு உயிர்களை எண்ணத்தில் கொள்ளுமா??? ஒன்றரை இலட்சங்கள் உயிர்களை கண்டும் காணாது விட்ட ஐ நாவுக்கு அந்த பன்னிரண்டு உயிர்கள் பெரிதாக எண்ணத்தில் படப்போவதுமில்லை. இன்றைய அவர்களின் இந்த அவல  நிலைக்கு ஐ நாவும் ஒரு காரணமே.

ஆம், அன்று அந்த முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்து நிறுத்தி இருப்பின் எம் உறவுகளுக்கு  ஏன் இந்த அவலம்? நவுரு தீவுகளில் ஆஸ்திரேலியா அகதிகளை குடியமர்த்த வேண்டாம் என்று குரல் கொடுக்க தெரிந்த ஐ நாவுக்கு துபாய்  மனித காட்சி சாலை பற்றி எள்ளனவேனும் அக்கறை இல்லை. உலக அரங்கில் வாய் கிழிய குரல் கொடுக்கும் ஐ நா ஈழத்தமிழர் எம் படுகொலைகளை இலங்கையில் தட்டிக்கேட்கத்தான் முடியவில்லை என்றாலும் அவர்களுக்கு தீனி போடும் வகையில் அகதி என்ற  நிலையில் உலகத்தின் கண்களுக்கு தெரிந்து கொண்டிருக்கும் எம் சொந்தங்களை இலங்கைக்கு அனுப்பி அங்கு இரையாகப்போகும் அவர்கள் உயிர்களையாவது காப்பாற்றவுமா முடியாது??

வெகு இலகுவாக ‘”நீங்கள் அனைவரும் ஈழத்தமிழர் என்பதால் உங்களை எந்த நாடுகளும் ஏற்றுக் கொள்ளாது , ஐநா சபையானது உங்கள் (அகதிகள்) சம்மந்தமான அனைத்துப் பணிகளையும் இன்றுடன் நிறுத்திக் கொண்டுவிட்டது, ஆகையால் எங்களால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் திரும்பவும் இலங்கை செல்வதுதான் சரியான வழி!!! அதனால், அடுத்த வாரம் இலங்கைக்கு செல்வதற்கான முடிவுகளை எடுத்து வையுங்கள், நாங்கள் ”IOM” அதிகாரிகளுடன் வருகிறோம்” என்று கூறி துபாய் இல் உள்ள ஐ நா அதிகாரிகள் அவர்களுக்கு  மரண தேதியை குறித்துச் சென்று விட்டார்கள். ஆக பத்து மாத காலமாக அவர்களை அகதியாக ஏற்றுக்கொண்டு செயற்படும் போது அவர்கள்  ஈழத்தமிழர் என்பது தெரியவில்லையா?? ஏற்றுக்கொள்ளாத நாடுகளில் எம் ஈழத்தமிழர்கள் இல்லையா??? அப்படியென்றால் அகதியாக ஏற்றுக்கொண்ட ஐ. நா வில் தான் தவறோ?? முதலிலேயே அவர்ளை நீங்கள் அந்த நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி இருக்கலாமே??



போர் அவலத்தால் சிக்கி சின்னாபின்னமாகி உருக்குலைந்து போன எம் சொந்தங்களின்  வாழ்வினை மீட்டெடுக்க சிறு நம்பிக்கை ஒளியினை கையில் ஏந்தி சிறைகளில் தவமிருந்து இருளில் வாசமிருந்து நரக வாழ்வினை நான்கு வயது சிறுமி முதற்கொண்டு அறுபத்தைந்து வயதான முதியவர்கள் , பெண்கள் என்று எந்தவிதமான அடிப்படை வசதிகள் அற்று, அவசிய மருந்துகள் மாற்று உடைகள் இன்றி கழித்து துன்பத்தில் துவண்ட போன அவர்களின்  நெஞ்சங்கள் உயிர் பயத்தில் உறைந்து நடுங்கிப் போயிருக்கின்றார்கள். 

எங்கள் சொந்த உறவுகள் அந்நிய தேசமதில் நிர்க்கதியாகி நிற்கும் இந்த அவல நிலையில் அவர்களுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து, அவர்களை  காப்பாற்றி வாழ வைக்க தமிழர்களின் அரசாங்கம் என்று கூறிக்கொண்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு மற்றும் புலம் பெயர் அமைப்புக்கள் ஏன் முயற்சிகள் எடுத்து அவர்களின் கண்ணீரைத்துடைக்க கூடாது? தமிழ் நாட்டு தமிழ் அரசியல் வாதிகள் சிறிதாக முயற்சி எடுத்து அக்கறை காட்டும் போது , இலங்கையில் தேர்தல் களத்தில் சாகசங்கள் புரியும் உள்ளூர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவர்களின் கண்ணீர் பெரிதாக தெரியவில்லையா? இலட்சக்கணக்கான உயிர்கள் அலறும் போதே குறட்டை   விட்டு பஞ்சணையில் படுத்துறங்கிய பெரிய மனிதர்கள் அந்த பன்னிருவரின் நிலை பற்றி எள்ளனவேனும் எண்ணுவார்கள் என்பது சந்தேகமே...!

வாழ வழியற்று இறுதிப்பயணத்தில் தத்தளிக்கும் அவர்களை கை தூக்கி விடுங்கள் என்று தமிழ் அமைப்புக்கள் , மாணவர் அமைப்புக்கள் , புலம்பெயர் அமைப்புக்கள் , மனித உரிமைகள் அமைப்புக்களிடம் மன்றாடிக் கேட்கின்றோம். அவர்களின்  கண்ணீரால் நனைந்த அந்த துபாய் மண்ணில் இருந்து உதிரங்களால் தோய்ந்த இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை கண்டும் காணாமல் இருக்காமல் உங்களால் முடிந்த  வரை அவர்களின் இருப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் உறவுகளின் கூக்குரல்களை செவி மடுத்து  நாடு கடத்தல் என்ற பெயரில் அவர்களுக்கு அரங்கேறப்போகும் அவலச்சாவினை தடுத்து நிறுத்த ஆவன செய்யுங்கள்..!


உயிர் வாழத்துடிக்கும் எம் உறவுகளின் குரலாக

அரசி நிலவன் 
தாய்லாந்திலிருந்து 

மண்டியிடாத மறத்தமிழ் வேந்தே..!!! மரணித்து அவதரிப்பது அவதார புருஷர்கள் மட்டுமே..!!


தமிழீழ தேசமது...
இருள் மூடி கிடந்தாலும் - தமிழர்  நாம்
இழிநிலை அடைந்தாலும்  
அருவமாய் உருவம் காட்டும்
இறையே... !!!

நின்னை,,
நின் பிறப்பெடுத்த நாளில் மட்டும்
நினைப்பதில்லை - என்றும் எம்  
விழியோடு கண்ணீராக...,
இதயக்கூட்டிலே துடிப்பாக...,
இரத்த நாளங்களில் செங்குருதியாக...,
கணப்பொழுதிலும் எம்முடன் தானே...!

கலங்கின கலக்கம் என்ன...?
கலக்கிய துலக்கம் என்ன...?
கண் பார்த்து..,
செவி கேட்டு..,
இதயம் உறைந்து போனாலும்...,
அறிவு ஏற்க போவதில்லை...!!!
கல்லை கடவுள் என்று 
கண் நம்பி, கை கூப்புவது..
கட்டாயம் உண்மை என்றால்
நின் வாழ்வும் மெய்மையே..!!!

அஞ்சிடா புலித்தலைவனே...!!
அகராதி போதாது உன் புகழ் பாட..
ஒற்றைத்தலைவனே..!!! 
ஒரு மொழி போதாது நின் வரலாறு  பாட 

அகவைகள் ஐம்பத்தேழு அல்ல..
அகவைகள் ஆயிரம் ஆனாலும் - என்றும் 
தமிழினத்தின் கலங்கரை விளக்கம் நீங்களே ..!!!!

கரிகால பெருஞ்சோழா....!!!
உன் வீரம் வாங்கி  
கையிலே துப்பாக்கி ஏந்தி - களமாடிய 
காவிய நாயகர்கள் - இன்று
கை கட்டி வாய் பொத்தி 
சிங்களவனின் காலடியில் 
சிறுமைத்தனமாய் அடிமைகளாகி
வாழ்வதை தொலைக்க..
வாழ்வு என்ற ஒன்றே கசப்பாகி போன..
அந்த உத்தம வீரர்களின் மானம் காக்க..

தமிழினத்தாலேயே வேறு கண் கொண்டு நோக்கி,,
விளிக்கப்படும்  "முன்னாள் போராளிகள்" என்ற 
வில்லங்கமான அடைமொழி நீக்கிட..

விரைவாக உங்கள் உயிர்ப்பு..!!! 
விளங்க வேண்டும் உலகிற்கு..

மண்டியிடாத மறத்தமிழ்  வேந்தே..!!!
மரணித்து அவதரிப்பது அவதார புருஷர்கள் மட்டுமே..!!
மடையர்களின் மண்டை கலங்க வெகு விரைவில் 
நின் வரவு உறுதியாகும் நாளை எதிர்பார்ப்புடன்....


அரசி நிலவன் 

வீரத்தோடு நிமிர்ந்து நிற்கும் வீர மறவர்களே..!!! கோழைகள் எம்மை பார்த்து ஏளனமாய் சிரிக்காதீர்..!!!


தமிழீழத்துக்காக,
தமிழினத்துக்காக,
துடித்து களம் மீதேறி 
தியாக வேள்வியிலே
நீறான திரவியங்களே..!!

பஞ்சணையை தூக்கி எறிந்து
ஏவுகணையை தோள் மீதேற்றி 
உயிரை விலை கொடுத்த 
உத்தம புத்திரர்களே..!!!

படி தாண்டா கண்மணிகள்
வெடி தாங்கி போயினரோ ..!!

கந்தக நெடி வாசனையோடு..
கல்லும் முள்ளும் கடந்து..
நீவிர் மீட்டெடுத்த - அங்குல 
நிலம்  கூட இன்று எம்மிடமில்லை - எம் 
நிம்மதிக்காக,, 
நித்திரை தொலைத்து..,
நீங்கள் சிந்திய குருதி...,
உங்கள் வித்துடல்களை,,  தானும் 
பொத்தி வைக்க முடியா பாவிகள் நாம் 
பொல்லாத சிங்களத்தோடு போராடாது 
கார்த்திகை மாதத்தில் மட்டும் குரல் கொடுக்கும் 
கோழைகள் எம்மை பார்த்து  ஏளனமாய் சிரிக்காதீர்..!!! 
வெட்கி தலை குனிந்து அஞ்சலிக்கின்றோம்....!!!

வீறு கொண்டெழுந்து,, 
வீர மரணத்தில் வீழ்ந்து,,
வித்தாகி,, 
விருட்சமாகி ,,
வீரத்தோடு நிமிர்ந்து நிற்கும் 
வீர மறவர்களே..
வீர வணக்கங்கள் உங்களுக்கு...!!!


அரசி

Thursday 12 September 2013

எண்ணம்...!!!


ஒவ்வொரு தனி மனிதனின் எண்ணங்களால்
ஒட்டு மொத்த உலகமே துண்டாடப்படுகின்றது..!
ஒரு சிறு மனிதனின் எண்ணங்கள் திசை மாறி -உலகத்தின்
ஒவ்வொரு உயிரையும் வேரறுக்க வல்லது...!


வல்லரசுகளின் வல்லாதிக்க எண்ணத்தால்
வறுமை தேசங்கள் பட்டினி என்னும் வர்ணம் கொண்டு
வண்ண மயமாக்கப்படுகின்றது....!



அணுவாயுதம்  சர்வ சாதாரணமாகி
அதைக்காரணம் காட்டி வலிந்து தொடுக்கும்
அத்து மீறிய யுத்தத்தினால்
அழிக்கப்படுகின்றது பல்லுயிர்கள்..!!
அநியாயமாக்கப்படுகின்றது தேசங்கள்...!!


இன்றும் இலங்கை பிளவு பட்டு கிடக்கின்றது
இனவாத எண்ணங்களால்.....!

அதிகாரம் ஆட்சி கொண்டோர் எண்ணியிருந்தால்
அடிமைத்தனமும் அராஜகமும் அழிக்கப்பட்டிருக்கும்..!
அந்த குட்டித்தீவில் அமைதி ஆட்சி புரிந்திருக்கும்....!
அட்டூழியம் காணாமல் போயிருக்கும்...!!!


எண்ணம் வழி தவறிப்போனதால்.....
அடிமைத்தனம் மேலோங்கியது....!
இலங்கை இரத்தம் குடிக்க ஆரம்பித்தது....!
இன்றும் குடித்துக்கொண்டே இருக்கின்றது....!

அடிமை விலங்கொடிக்க அன்று
ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்தார்கள்..!
ஆரம்பித்து வைத்தார்கள் அன்று
ஆட்சியின் உச்சத்தில் இருந்தோர்...!


பேரினவாத எண்ணங்கள் இன்றும் நாட்டினை
பேயாட்டம் ஆட்டிக்கொண்டே தான் இருக்கின்றது..!
பேய்கள் பிசாசுகளை கண்ணுற்றதில்லை யாரும்  ஆனால்
பேய்கள் பிசாசுகள் பாராளுமன்றமே நடாத்துகின்றன  இலங்கையில்..!
பேரினவாதமும் மனித உரிமை மீறல்களும் கை கோர்த்து
இல்லறம் நடாத்தும் அழகே தனிதான்...!



நிலையில்லா உலகை ஆள நினைத்த மனிதன் நிலைப்பதில்லை...!!!
நிலைத்து நின்று ஆட்சி புரிகின்றது அவன் நினைத்த எண்ணங்கள்..!!!
நீண்டு செல்கின்றது குற்றங்களும் உரிமை மீறல்களும்...!

பணம் உள்ளவன் எண்ணினால்
பரதேசியும்  பசியாற முடியும்...!!!
பலம் மிக்கவன் கேடு நினைத்தால்
பாலகனும் படுகொலையாவான்...!!!

எண்ணங்களின் அரச சபையில்
எல்லா மனிதனும் ஆளப்படுகின்றான்...!!!
எண்ணங்களுக்கு கிரீடம் சூடி சாமரை வீசும்
எடுப்பார் கைப்பிள்ளை தான் இந்த மனிதன்....!!!





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "எண்ணம்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/














Wednesday 11 September 2013

பர பரப்பு..!!!




செவிகள் மட்டுமல்ல
செக்கச்சிவந்த விடிகாலை வானத்தின்
செவிப்பறையும் கிழிந்து தொங்கும்...
காற்றை கிழித்து விரைந்து வரும்
கிபிர் என்ற அரக்கனின் மூச்சிரைப்பால்....


கண்கள்  ஆகாயம் நோக்க
கரங்கள் குஞ்சுகளை அள்ளி எடுத்திட
கால்கள் தட்டுத்தடுமாறி இடறி
பர பரக்கும் நெஞ்சம் ஒருவாறு
பதுங்கு குழிக்குள் பதுங்கிடும்...!

பருந்திற்கு விருந்தாகா வண்ணம் குஞ்சுகளை
இறகணைக்கும் கோழியினை போன்று
நெஞ்சோடு குழந்தைகளை அணைத்துத்  தன்னை
கவசமாக்கும் ஈழ அன்னையின் பட படக்கும்
நெஞ்சில் முகம் புதைத்து முழி பிதுங்கும்  - எதிர்கால
முளை விருட்சங்களின் பர பரப்பினை - நான்காண்டுகளுக்கு
முந்தி உணரத்தெரியாத சர்வதேசமே...!


அள்ளி அள்ளி பல்குழல் எறிகணைகளை வீசி
அருமந்த உயிர்களை அநியாயமாக துடி துடிக்க வைத்து
அப்பா இது அம்மா அது என்று சதைப்பொட்டலம் கட்டி - கதறி
அழுது துடித்த இளம்பிஞ்சுகளின் அந்த பர பரப்பினை
எள்ளனவேனும் சிந்திக்க தெரியாத சர்வதேசமே...!

எடுப்பார் கைப்பிள்ளைகளாக இறுதிக்கணங்களில்
எறிகணைகளை துணிச்சலோடு எதிர்நோக்கி
உதிரக்கடலில் தோய்ந்து காய்ந்து துப்பாக்கி சன்னங்கள்
பறந்து வரும் திசை அறிந்து விலகி புரண்டு எழுந்து
நிமிர்கையில் அடுத்த எறிகணையின் வெடிப்பினை
நிச்சயப்படுத்தி மாறி மாறி உயிரை கையிலும்
காலிலும் பிடித்து மீறித்தவறி ஓடும் உயிரை இழுத்துப்பிடித்து
மீண்டும் உடலுக்குள் செலுத்திய துணிச்சல்.....
அறிந்தும் கண் மூடி உலவும் சர்வதேசமே....!


பர பரப்பில் செய்வதறியாது நின்று சன்னங்களுக்கு
பலியாகிய சொந்தங்கள்...,
எறிகணைகள் ஏறி வெடித்தும் வெடிக்காமலும்
உருக்குலைந்த உடன்பிறப்புக்களை கண்டும் கடந்தும்
உயிர் இழந்த உடலங்கள் சதைகளோடு
கழித்து வந்த  இரவுகள் பகல்கள்...!

எங்களின் தேசம் செந்நிறமாய் குருதியில்
குளித்து தமிழனின் சதைகளால் நிரம்பி வழிந்த
அந்த கொடூரம் நிறைந்த காட்சி என்றைக்கும்
அழியாமல் இறுதிவரை நெஞ்சத்தில் பர பரப்போடு
பயணிக்கும் நினைவுகளை சுமந்த எத்தனையோ உறவுகள்
பல இறுதிக்கணத்தில் போர்க்குற்ற சாட்சிகளாக
பயந்து பயந்து வழங்கிய சாட்சிகளை ஏறெடுத்தும்
பார்க்காத பக்கச்சார்பு சர்வதேசமே...!


ஒவ்வொரு முறையும் காரணம் கூறி
வருகை தந்து நடைப்பிணங்கள் எங்களை
உயிர்ப்பித்து விட்டு காட்சிப்பொருளாக்கி,
உலகத்தின் வேடிக்கை கதா பாத்திரங்களாக்கி,
எங்கள் நம்பிக்கைகளை அறுத்து எறிந்து
உங்கள் வருகைகளை செய்திகளில்
பர பரபாக்கி எங்கள் இதயங்களை
இறுக்கி பிழிகின்றீர்கள்....!!!


சரணடைந்த கணவன் இருக்கின்றாரோ...?
ஒவ்வொரு குங்குமமும் தாலியும்
ஒரு சந்தேகத்தில் தான் அலங்கரிக்கின்றது அவர்களை....!
எந்நேரத்திலும் அழிக்கப்படலாம் என்று குங்குமங்களும்,
எந்நேரத்திலும் அறுக்கப்படலாம் என்று மஞ்சள் தாலிகளும்,
எம் பெண்களின் நெற்றியோடும் கழுத்தோடும்
பர பரத்து முணு முணுக்கும் ஒலியில்
பதை பதைக்கின்றார்கள் அப்பேதைகள்....!


அப்பா வராமலேயே போயிடுவாரோ...?
புகைப்படத்தை வெறித்துப்பார்க்கும் ஒவ்வொரு
ஈழக் குழந்தையின் இதயமும்
பரபரப்பின் வரைவிலக்கணம் நன்கறியும்...


கொள்ளி போடுவதுக்கும் வர மாட்டானோ...?
தள்ளாடும் வயதிலும் ஏக்கத்தின் உச்சத்தில்
உயிர் துறக்க காத்திருந்தாலும்..,
காணாமல் போன பிள்ளைகளுக்காக
காத்திருக்கும் பெற்றோரின் உள்ளப்பரபரப்பு...!


புனர்வாழ்வு எனும் பெயரில் சிதைக்கப்பட்டு,
புனித போரில் களமாடிய நினைவுகளை சுமந்து - மனம்
புண்பட்டு புதிய சுழலில் வாழத்தடுமாறி,
புலனாய்வு பிரிவு எந்நேரத்திலும்
புலன் விசாரணைக்கு அழைக்க கூடும் என்ற
பர பரப்பில் பகல் இரவாய் துடிக்கும்,
ஈழத்தில் ஒரு காலத்தில் காவலர்களாய்
தலை நிமிர்ந்து நடந்தோரின் குமுறல்கள்..
தனியாக ஒரு காவியம் படைத்திடலாம்....!


இன்னும் இன்னும் ஈழத்தில்.....
இன்று வரை இலை மறை காயாய்
இழைக்கப்படும் அநீதிகள்.....,
இழக்கப்பட்டு கொண்டிருக்கும்...
ஈழத்தமிழனின் நிலங்கள், அதிகாரங்கள், உரிமைகள்...
ஈழத்திலேயே புதைந்து தான் போய்க்கொண்டிருக்கின்றது
நாளை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய கூட
நாதி அற்றுப்போய்  விட்டான் ஈழத்தமிழன்...!!!
நம்பிக்கைகளையும் அவனோடு புதைக்கும் சர்வதேசம்
நன்றாகத்தான் உலவுகின்றது எவ்வித பர பரப்புமின்றி....
பர பரப்பு என்ற பதம் ஈழத்தமிழனுக்கு மட்டுமே உரித்தானதோ...?

பல நாடுகளில் பரந்திருக்கும் ஈழத்தமிழனவனுக்கு
படுத்து உறங்க தன்னும் சொந்தமாய் நாடு இல்லை...!
"படுகொலைகள்" "காணாமல் போதல்" "குருதி" "கண்ணீர்".
பல ஈழத்தமிழர்களின் எழுதப்பட்ட  சொத்துக்கள்....
ஆக....
பர பரப்புக்கு சொந்தக்காரன் ஈழத்தமிழன் மட்டுமே...!!!







லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பர பரப்பு" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/




Tuesday 10 September 2013

திரை...!!!.



உழைப்புகள் சில கண்ணுக்கு விருந்தாக
உலகமே மெய்மறந்து ரசிக்கும் திரையில்
உண்மை உழைப்புக்கள் பல காட்டப்படுவதில்லை..!

திரையிட்டு வெளியிடுகின்றார்கள்..!
திறமையான நடிப்பு என்று கை தட்டி
விருதுகளும் கை மாறுகின்றன.....
காலங்காலமாக...


போலியாக உழைப்பவன் போற்றப்படுகின்றான்
திரை என்னும் மாய உலகில்.....!
உண்மையாய் உழைப்பவன் பார்வைக்கு கூட இல்லை
திரை என்னும் பொழுது போக்கு உலகில்...!

அதையொத்து....

உண்மை உலகில்
சிரிப்புக்களும் கேலிகளும் திரைக்கு முன்  வழங்கப்படுகின்றன..!
அழுகைகளும் வேதனைகளும் பின்னே  மறைக்கப்படுகின்றன..!
இங்கும் ஒரு பெரிய திரை.....!

மனத்திரையின் பின்னே கொட்டிக்கிடக்கும்
மலை மலையான துன்பங்கள் பார்வைக்கு
மறந்தும் விடப்படுவதில்லை - இவற்றை
மறைத்துக்காட்ட  வானாளாவி நிற்கும் - ஒரு
மகத்தான மனத்திரை வேண்டும்...!!!.


அரைகுறையாய் திரை விலகினாலும்
அத்தனை துன்பங்களும் உடனடியாக
அனைவரின் பார்வைக்கும் விருந்தாகிடுமோ...?
அச்சத்தில் என்னென்ன உழைப்புக்கள்...!


சிரித்துக்கதை பேசி சின்னச்சின்னதாய் கிண்டல் செய்து
கடினப்பட்டு காட்டிக்கொள்கின்றோம்...!
மகிழ்ச்சியாய் தான் நாமும் இருக்கின்றோம் என்று
மற்றவர்களைப்போல நடித்துச்சந்தோசிக்கின்றோம்,,.!

இல்லை என்பதை இல்லை என்று உரைத்தால்
இல்லாதவர்கள் என்று இகழ்ந்திடுவார்களோ..?
'இயலாமைகள்' 'இழப்புக்கள்' 'இல்லாதவைகள்'
இழுக்கப்படும் வலிமையான மனத்திரைகளால்
இயன்றளவு  மறைக்கப்படுகின்றன..!
இல்லை இல்லை புதைக்கப்படுகின்றன - எங்கள்
இதயங்களுக்குள் நிரை நிரையாக....

மனிதர்களின் உண்மைத்திரையில்
மகத்துவமான நடிப்பை வெளிப்படுத்தி
மற்றவர்களை நம்ப வைக்கின்றோம்....!
மனத்திரையின் பின்னால் இதற்கு
மனம் வருந்தாமல் ஒத்திகையும் பார்க்கின்றோம்...
மறு நாள் எப்படி நடிக்கலாம் என்று....

அடுத்தவர்களின் ஏளனங்கள்
அறியத்துடிக்கும் ஆவல்கள்
அனுபவிக்கும் துன்பத்தை விட
அதிக வலி  மிகுந்தது என்பதால்

திரை என்பது எமக்கு அத்தியாவசிய ஒன்றாயிற்று-மனதில்
திரையிட்டு எம் வாழ்வினை வாழப்பழகி நாளாயிற்று
திரை நீங்கும் காலம் கை கூடினாலும் எம்மால் - மனத்
திரை இன்றி வாழ முடியுமோ என்பது சந்தேகமே....!



நிலவரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "திரை" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/




Monday 9 September 2013

மெட்டி...!!! (இறுதிக்கணம் வரை... இசைத்துப் பயணிக்கட்டும்....!)



அம்மி ஏற்றி அன்பாய் அணிவித்தவன் காதல்
அலாரம் போன்று.... அடிக்கடி ஒலித்துக்  
கொண்டேயிருக்கின்றது....! இந்த சின்ன ஒலியின்
இதய நாதம் எனக்குள் - அவனின்
இதயத் துடிப்பாக துடித்து...,
இரும்பின் பிணைப்பாக அவனோடு
இணைத்து ஒலிக்கின்றது
இன்று வரை...!

இதயத்தை கழற்றி எனக்குள்
இடம் மாற்றி வைத்து - என்
இதயமதை கொண்டு சென்றவன்
இந்த ஒலியை மட்டும் தன்
இதயத்துடிப்பாக விட்டு சென்றான்...!

இதய நாதமாய் உன்னோடு - உன் 
இறுதிக்கணம் வரை... 
இசைத்துப் பயணிக்கட்டும்....! 
இழந்திடாதே எவ்விடர் வந்திடினும்
இறுக்கி கரம் பற்றி என்னவன்
இறுதியாய் உதிர்த்த வார்த்தைகள்.....!








இறுதிக்கிரியையில் - என்னவனின்
இதய நாதமதை துறக்க மறுத்த என்னை
இன்று வரை முச்சந்திகளிலும் தெருக்களிலும்
இகழ்ந்து பேச பின்னிற்போர் அரிதே....!





கடவுளை கல்லாய் பார்க்கும் மனிதர்களை போன்று
வெறும் கண் கொண்டு நோக்குவோருக்கு
வெள்ளி மெட்டியாய் காட்சி கொடுக்கும் - இந்த
வெள்ளி ஒவ்வொரு முறையும் ஒலிக்கும் போது
அள்ளி செல்லும் என் மனதை என்னவனை நோக்கி...

தரையைத்தொட்டுச்செல்லும் உராய்வால் என்னை
வருடிச்செல்வான் அவன் தன் நினைவுகளால் என்பதை
முச்சந்தி முக்கியஸ்தவர்கள் அறிந்திட நியாயமில்லை...!
முதுகெலும்பு அற்றோரின் கேலிக்குப் பலியாகி - என்னவனின்  
மூச்சினை நிறுத்திட போவதுமில்லை....! 
முத்தான என் மெட்டியினை துறந்திட போவதுமில்லை...!

நடை பயில்கின்றேன் அதிகமாக...
நன்றாக ஒலிக்கட்டும் என்னவனின் இதயம்...!
நகைப்புக்களின் ஒலியை அடக்கிட
நன்றாக ஒலிக்கட்டும் என் மெட்டியில் அடங்கிய
என் இதயவனின் மூச்சொலி.....!!!

எட்டி எட்டி போகின்றேன் விரைவாக
தட்டி தட்டி அழைத்து - என்னவன்
முட்டி முட்டி உதைக்கின்றான்
முச்சந்தி வாய்களை அவன்
மூச்சொலியால்......!!!

வெட்டி வெட்டி சாய்க்கின்றான்
வெட்டி பேச்சு மனிதர்களை
மெட்டி ஒலியால்...!!!



மெட்டியல்ல மெட்டியல்ல இது எனக்குள்
பூட்டி பூட்டி வைத்திருக்கும் என்னவனின் 
புனிதமான உயிர் மூச்சு..!!!

அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மெட்டி" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/






Thursday 5 September 2013

நடிப்பு....!!!


உலகம் மனதால்
ஊனமாகி நாளாகிவிட்டது
உயிர்களின் உணர்வுகளும் உயிர்த்துடிப்புகளும்
உண்மையற்று நடிப்பாகி நாளாகி விட்டது.

நடிப்பதற்காக  கண்ணீர் சிந்தி சிந்தி
உண்மை கண்ணீரும் இன்று
நடிப்பாகி அர்த்தமற்று காலாவதியாகி விட்டது.


அன்பும் பரிவும் நகைப்பிற்கும்
அழுகையும் சிரிப்பும் ஏளனத்திற்கும்
பலிக்கடாவாக்கி பலகாலமாகி விட்டது...

உணர்வுகள் செத்துப்போய் மனிதன்
உயிரோடு உலவுகின்றான் உலகில்
உண்மைகள் சாகடிக்கப்பட்டு
கிரியைகளும் செய்து திதிகள் பல  கடந்தாயிற்று..

உயிராய் நேசிக்கும் உறவுகளும்
புரிந்துணர்வின்றி உண்மை  அன்பினையும்  ஒற்றைச்சொல்லில்
புதை குழி தோண்டி புதைக்கின்றார்கள் "நடிப்பு" என்று

நடிப்பு என்பதை அறியும் வரை
நடிப்பவன் நடித்து கொண்டிருக்க
நடிப்பை நம்புவோன் (நம்ப)நடிக்க வைக்கப்படுவான்..

உணர்வுகளும் வேதனைகளும் நளினங்களாக நயம் பிடிக்கப்படும்....
பாசாங்குகளும் பொய்களும் ஒப்பனைகளாக அலங்கரிக்கப்படும்...
காலங்காலமாய் அரங்கேறி வருகின்றது-இந்த
நடிப்பு நாடகம்(ஏமாற்று வேலைகள்)
நாடக(உலக)அரங்கில்...!

நாடகத்தின் ஆட்டம் தாங்காது
நாடக அரங்கம் ஆட்டம் காணும் வரை...
நாடகம் அரங்கேறிக்கொண்டே இருக்கும்...
நாடக அரங்கம் ஒன்று ஒத்திகையும்
பார்க்கப்படுகின்றதாம் விண்வெளியில்



ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க கூடிய அரங்கமா - என்று
ஆராய்ச்சியும்  தொடர்ந்து கொண்டிருக்கின்றதாம்....
அரங்கம் ஒன்றின் மீது  போடும் ஆட்டமே
அரள வைத்து அல்லாட வைப்பது போதாதோ...?

அளவுக்கதிக நடிப்பினை தாங்க முடியாத அரங்கம்
அவ்வப்போது தற்கொலைக்கு எத்தனிக்கின்றது...
அடிக்கடி செப்பனிடப்பட்டு அரங்கம் தள்ளாடி
அரை உயிரில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாகி
அழகாய் தான் காட்சி கொடுக்கின்றது-ஒரு வேளை
அரங்கமும் நடிக்கின்றதோ???



அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "நடிப்பு" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/


Thursday 29 August 2013

எமக்கு எதற்கு "அகதி" என்ற அங்கீகாரம்....???




அவலங்கள் நடந்தேறுவதை கண்டும் 
அவலம் ஒன்று இடம்பெறபோவதை 
அறிந்தும் அங்கிருந்து தலைதெறிக்க 
அவசர அவசரமாய் தப்பி ஓடுவதும் - பின் 
"விசாரணை" "போர்க்குற்றம்" 
"மனித உரிமை மீறல் " என்று
உலக நாடுகள் முன் நற்பெயருக்கு முனைவதும்
உண்மை நிலைகளை கண்டறியும்
"உத்தியோக பூர்வ விஜயம்" என்று
கொலைக்களம் ஏகி இரண்டும் கெட்டான்
அறிக்கைகளை கடமைக்கு சமர்ப்பித்து
அல்லல் படும் உறவுகளின் நம்பிக்கையில்
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் ஐ. நாவே...!!!

இலங்கையின் இனவாத வெறிக்கு
இரையாக போகின்றவர்கள் என்றும்
இவர்கள் நாளை அங்கு காணாமல் போக
இருப்பவர்கள் என்றும் கத்தி கத்தி
உன் செவிகளுக்குள் விழுந்து விழுந்து
உரத்து சொல்லியாயிற்று....

ஈழத்தமிழர்கள் என்று தானே
ஈற்றில் அகதி என்றாய்....!!!
ஈரைந்து திங்கள் எம் கண்ணீர்
ஈன வாழ்வினை கண்டிருந்தும்
ஈழத்தமிழர் என்று காரணங்காட்டி
ஈவிரக்கமின்றி துரத்துகின்றாயே...!



இன்று நீ எம்மை துரத்தி விட்டு
நாளை அங்கு நல்லபிள்ளைக்கு வருவாய்
எம் பிள்ளைகள் கையில் எம் படங்களுடன்
காணாமல் போனோர் உறவுகளாய் உன் முன்னால்
காரணமே நீ என்று அறியாமல் பத்திரிகைகளும்
கலர் கலராய் படம் பிடிக்கும்...!!!
வரலாறுகள் சொல்லி வரும் கதை இது....
வந்தார்கள் சென்றார்கள் என்று நீங்களும்
உயிரோடு சாகடிக்கப்பட்டும்
உலகத்துக்கு தெரியாமல்
உறவுகளுக்கும் தெரியாமல்
காணாமல் போனவர்களாய் நாமும்....
தொடர்கின்ற கதை இது.....






எம்மை காப்பாற்ற தயக்கம் காட்டும் உன் சபையில்
எமக்கு எதற்கு "அகதி" என்ற அங்கீகாரம்....?
அகதி என்ற பதத்திற்கு உன் அகராதியில் - நீ
அளித்த வரைவிலக்கணம் தான் என்ன ??

எங்களுக்காக என்ன குரல் கொடுத்தீர்கள்??
எங்களுக்காக என்ன தட்டி கேட்டீர்கள்??
உங்கள் சாசனத்தை மாற்றி எழுதுங்கள்...
ஈழத்தமிழனுக்கு ஐ.நா வில் அகதியாக கூட
உரிமை இல்லாதொழிக்கப்படுகின்றது என்று..







நிலவரசி நிலவன் 



துபாயில் இறுதிக்கணங்களில் உயிர் ஊசலாட எந்த நேரமும் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் கண்ணீரோடு தவிக்கும் பன்னிரு ஈழத்தமிழ் உறவுகளுக்காக அவர் தம் எண்ணங்களை பிரதிபலிப்பாக.....எழுதியது.... 

Saturday 3 August 2013

அடங்கா மண் கற்றுத்தந்த வீரம் அடக்கமான உதிரத்தில்.... அமைதியாய் உறங்குகின்றது....!!!


வெடியின் நெடிகள் நிறைந்த
வெஞ்சமர்களை நெஞ்சு நிமிர்த்தி 
களமாடி சிங்களத்தின் பிடரி   
கதிகலங்க வைத்து....


நெஞ்சிலே நஞ்சு மாலையினை  ஏந்தி 
நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கும் 
தமிழீழ  வேட்கையின் சுவடுகளை...
தலைவன் பின்னால் தடம் பதித்து.....,,
தலை நிமிர்ந்து  திமிருடன் 
தலை வணங்காது  நாம் நடந்த 
தரை எங்கும்  இன்று நாணி
தலை குனிந்து செல்லுகின்றேன்...!!!



அடங்கா மண் கற்றுத்தந்த வீரம்  
அடக்கமான உதிரத்தில்....
அமைதியாய்  உறங்குகின்றது....!!!

யாசிக்கும் யாசகனுக்கு புன்னகை சிந்தும்  
யாரும் எம்மை நோக்குவது அரிதே...!
புறம் பேசிடும் உள்ளங்களும்  
புது உறவுகள் அல்ல - ஈழ
அன்னையை  நேசித்து, 
அண்ணனை துதித்து, 
புனிதமாய் எம்மை நினைத்த 
எம்மினமே....!!!
எள்ளி நகையாடுவதும்  
எம்மினமே...!!!

சொல்லாட 
சொந்தங்களே  பின்நிற்கின்ற
சோகமும்,,,  

எல்லையிலே - அன்று 
எட்டி உதை பட்ட  காடையர்  
எட்டப்பர் கூட்டத்தின் முன்னால் 
முதுகெலும்பு அற்ற வாழ்வும்,,

புனர்வாழ்வு என்ற பெயரில் எம் உள்ளத்தை 
புண்ணாக்கி எம்மை நோக்கும் அசிங்க கண்களும்,, 

" முன்னாள் போராளிகள்" என்ற அடைமொழி கொண்டு 
முகத்திற்கு நேரே விழிக்கும் செய்தியாளர்களின் 
வில்லங்கமான வினாக்களும் விளக்கங்களும்,,  


இரண்டடி தூரத்தில் பேசிடும் வசைமொழிகளும்,, 
இரவுக்கு மட்டும் தெரிந்திடும் கண்ணீரும்,,
எந்த நொடியும் வாசலுக்கு வரலாம் என 
எதிர்பார்த்து கலங்கிடும் விசாரணை அழைப்பும்,,
எம் இதயத்தில் எரியும் தீயினை அணைத்திடுமா???
எம் நெஞ்சில் நீறு பூத்த நெருப்பாய் தகிக்கும் நினைவுகளை அழித்திடுமா???


முடிந்து விட்டது என்று முட்டாள்தனமாய் எண்ணுகின்ற 
முடிவில்லா போராட்டம் முடிந்து தான் போய்  விடுமா?? 
முடங்கி தான் உள்ளதேயன்றி முகவரி அற்றுப் போய் விடவில்லை ...!!!


வரியணிந்த வேங்கைகள்...
கொடூர சிங்க கோரப்பற்களால் கிழிக்கப்படுவதும், 
நரிகள் கூட்டத்தால் எள்ளி நகையாடப்படுவதும்,
வீழ்ந்த விழுப்புண் ஆறும் வரையே...............................