உருமாறிய காலம்
உருக்குலைந்த தேசம்
உண்மை நெடுநாளாய் ஆழ்ந்த
உறக்கத்தில்.....
உறக்கமின்றித் தவிக்கும் விழிகள்
உண்மை என்னவென்று
உரைத்திட யாருளரோ???
உலகமே அங்கலாய்ப்பில்.....
உணர்வு கட்டுக்கடங்காமல்
உச்சி முதல் உள்ளங்கால்வரை
உலகம் எங்கும் பொங்கி எழுகின்றது...!
உலகத்தமிழ் உணர்வாளர்கள் தேசியம்
உரிமை என்றெல்லாம் போராட்டம்...!
உறங்கும் உண்மை அசராது தொடர்ந்து
உறங்கிக்கொண்டே இருக்கின்றது....!
உறக்கம் கலைக்க முயலும்
உணர்வாளர்களுக்கு உண்மை
உறங்கும் இடம் பொருள்
உரைத்திட யாருமில்லை....!
உண்மையின் உறக்கத்தால்
உலகம் நம்பும் நவீன வேசங்கள்
உருத்தெரியாமல் ஆகிட
உறங்கும் உண்மை சுயமாய்
உடைத்து எழுந்து வருமா - அன்றி
உலகத்தை வெறுத்து நிரந்தரமாய்
உறக்கத்தில் ஆழ்ந்து மண்ணோடு
உருக்குலைந்து மக்கிப்போகுமா??
உலகத்தமிழ் மக்கள் கொண்ட நம்பிக்கை
உருக்குலைந்தாலும் உறங்கும் உண்மை
உருவெடுத்து உலகம் எங்கும் உரக்க
உரைக்கவிருக்கும் செய்தியால்
உடைந்திடும் உள்ளங்கள் அதிகம் தான்....!
உள்ளங்கள் உடையும் என்பதற்காய்
உண்மை நெடுநாள் உறங்கிடப்போவதில்லை....!
உடைத்து நெஞ்சம் வெடித்துப் போகும்
உண்மை விரைவில் செவியில் சேரட்டும்....!
உலகம் எங்கும் உறக்கம் கலையட்டும்...!
உண்மை இனியாவது உலகை ஆளட்டும்..!
உருக்குலைந்த தேசம்
உண்மை நெடுநாளாய் ஆழ்ந்த
உறக்கத்தில்.....
உறக்கமின்றித் தவிக்கும் விழிகள்
உண்மை என்னவென்று
உரைத்திட யாருளரோ???
உலகமே அங்கலாய்ப்பில்.....
உணர்வு கட்டுக்கடங்காமல்
உச்சி முதல் உள்ளங்கால்வரை
உலகம் எங்கும் பொங்கி எழுகின்றது...!
உலகத்தமிழ் உணர்வாளர்கள் தேசியம்
உரிமை என்றெல்லாம் போராட்டம்...!
உறங்கும் உண்மை அசராது தொடர்ந்து
உறங்கிக்கொண்டே இருக்கின்றது....!
உறக்கம் கலைக்க முயலும்
உணர்வாளர்களுக்கு உண்மை
உறங்கும் இடம் பொருள்
உரைத்திட யாருமில்லை....!
உண்மையின் உறக்கத்தால்
உலகம் நம்பும் நவீன வேசங்கள்
உருத்தெரியாமல் ஆகிட
உறங்கும் உண்மை சுயமாய்
உடைத்து எழுந்து வருமா - அன்றி
உலகத்தை வெறுத்து நிரந்தரமாய்
உறக்கத்தில் ஆழ்ந்து மண்ணோடு
உருக்குலைந்து மக்கிப்போகுமா??
உலகத்தமிழ் மக்கள் கொண்ட நம்பிக்கை
உருக்குலைந்தாலும் உறங்கும் உண்மை
உருவெடுத்து உலகம் எங்கும் உரக்க
உரைக்கவிருக்கும் செய்தியால்
உடைந்திடும் உள்ளங்கள் அதிகம் தான்....!
உள்ளங்கள் உடையும் என்பதற்காய்
உண்மை நெடுநாள் உறங்கிடப்போவதில்லை....!
உடைத்து நெஞ்சம் வெடித்துப் போகும்
உண்மை விரைவில் செவியில் சேரட்டும்....!
உலகம் எங்கும் உறக்கம் கலையட்டும்...!
உண்மை இனியாவது உலகை ஆளட்டும்..!
No comments:
Post a Comment