Search This Blog

Monday 18 August 2014

வீணாய்ப்போனது....!

வாழ்வின் எல்லையில்.....
ஒற்றைக்கால் நுனியில் - நின்று
ஒப்பாரி வைக்கின்றேன்...!

உயிர்கள் இரண்டின்
உன்னதம் தெரிந்து
உடைந்து நிற்கின்றேன்...!

பணம் என்ற காகிதத்தின் மாயம்
குணம் அற்ற உறவுகளின் சாயம்
வெளுத்து நாளாயிற்று...!

உணர முடியாத பலவற்றை உணர வைத்த
உலகத்திற்கும் காலத்திற்கும் நன்றிகள் கோடி...!

நலிந்து போகாத எந்தன்
நம்பிக்கையின் கை பற்றி
நடக்கின்றேன் என் இலட்சியம் நோக்கி....

நடைப்பிணமான இவள்
நடை முடிவுறும் நேரம்
பிணமானால்....???

பிரிவு தாங்காது
பிஞ்சுகள் கதறினால்
ஐயகோ....!!!!

ஆதலால்....

பிரித்து எடுத்து செல்லுகின்றேன்
பிஞ்சுகளையும் என் கூடவே....
பிணத்துடன் பிணமாக அவர்களும் இருக்கட்டும்....!


   

No comments:

Post a Comment