Search This Blog

Thursday 7 August 2014

கலைந்து போன கூட்டில் இருந்து - நிலை
குலைந்து போன குஞ்சுகள் போல கத்தும்
எங்கள் குரல் கேக்குதா...!

நிமிர்ந்து நின்றோம் உயர்ந்து வந்தோம்...
சரிந்து விட்டோம் குற்றுயிராய் கிடக்கின்றோம்...!

வரலாற்றை தட்டிப்புரட்டினால்
வடுக்களும் வஞ்சகங்களும்
வரிசை கட்டி நிற்கின்றன....!

வசை மொழிகள் இங்கே மலிந்து கிடக்க
வாழ்த்துக்கள் மருந்திற்கும் தட்டுப்பாடாய்...

புன்னகைக்க யாருமில்லை - இதயத்தை
புண்ணாக்கி பந்தாட கூட்டமாய்
காத்திருப்போர் அதிகம் தான்

சற்றும் எதிர்பார்க்கவில்லை
சடுதியான இந்த துன்பம்
சல சலப்பின்றி நீட்சியாய்
அரை தசாப்த காலத்தை தொட்டு நிற்கின்றது
அசை மீட்கின்ற கடந்த கால கணங்கள்
பந்தாடி செல்கின்ற உள்ளத்துக்கு  நன்றாகவே
உணர்த்துகின்றது காலத்தின் வெற்றியான
பந்தாட்டத்திற்கு உகந்த பந்து எங்கள் வாழ்வு என்றே...!

1 comment:

  1. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
    http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

    ReplyDelete